ஆப்நகரம்

கொட்டித் தீர்த்த மழை...நெல்லை மக்கள் ஹேப்பி!

நெல்லை மாநகர பகுதியில் காலை முதல் வெயிலின் தாக்கம் அதிகம் இருந்த நிலையில் மதியத்திற்கு மேல் பரவலாக பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

Samayam Tamil 8 Oct 2020, 6:27 pm
கடந்த சில தினங்களாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்தது வந்த போதிலும், நெல்லையில் வெயில் வாட்டி வதைத்தது. இந்நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
Samayam Tamil nellai rain


ஆனால், நெல்லை மாநகர பகுதிகளில் இன்று காலை முதல் கடும் வெயில் வாட்டி வதைத்து வந்தது. வெப்பத்தின் தாக்கமும் அதிக அளவு இருந்தது. இதனால் பொதுமக்கள் புழுக்கத்தில் தவித்து வந்தனர்.

இந்த நிலையில், மக்களின் மனதையும், பூமியையும் குளிர்விக்கும் விதத்தில், நெல்லை மாநகரின் பல பகுதிகளில், இன்று மதியம் வானிலை சட்டென்று மாறியது. கருமேகம் சூழ்ந்த நிலையில், மாநகரின் பல பகுதிகளில் இடி, மின்னலுடன் மழை கொட்டித் தீர்த்தது.

சரக்கு விலைக்கு மேல ஒரு ரூபா கூட தர முடியாது... டாஸ்மாக்கில் கெத்து காட்டிய 'குடிமகன்'!

நெல்லை சந்திப்பு கொக்கிரகுளம், வண்ணார்பேட்டை, பாளையங்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக நல்ல மழை பெய்தது, இதன் காரணமாக் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருவதால், நெல்லை மாநகர மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

அடுத்த செய்தி