ஆப்நகரம்

நெல்லையில் வெறிச்சோடி காணப்பட்ட பத்திரப்பதிவு அலுவலகங்கள்

தமிழக அரசின் அறிவிப்பின்படி நெல்லையில் திறக்கப்பட்ட பத்திரப்பதிவு அலுவலகங்கள் மக்கள் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டன

Samayam Tamil 20 Apr 2020, 7:33 pm
நெல்லை: பத்திரப் பதிவிற்கு மக்கள் வராததால் நெல்லை மாவட்டத்தில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டது.

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவால் அரசு அலுவலகங்கள் பெரும்பாலும் மூடப்பட்டு, அத்தியாவசிய பணிகளுக்கான அலுவலகம் மட்டும் குறைந்த பணியாளர்களைக் கொண்டு இயங்கி வந்தது.

இந்நிலையில் இன்று முதல் பத்திரப்பதிவு அலுவலகங்கள் செயல்படும் தமிழக அரசு அறிவித்திருந்தது. அதனடிப்படியில் நெல்லை மாவட்டத்தில் உள்ள 14 பத்திரப்பதிவு அலுவலகங்கள் இன்று காலை முதல் செயல்பட தொடங்கியது. அலுவலகங்களில் 33 சதவீத பணியாளர்களை கொண்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

எங்களை காப்பாத்துங்க... ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் வலியுறுத்தல்!

எனினும், காலை முதல் மாலை வரை பரபரப்பாக காணப்படும் பத்திரப்பதிவு அலுவலகங்கள் பொதுமக்கள் கூட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது. மாவட்டத்தில் உள்ள 14 பதிவு அலுவலகங்களில் ஐந்து அலுவலகங்களில் மட்டும் ஒரே ஒரு டோக்கன் மட்டுமே பெறப்பட்டுள்ளது. மற்ற அலுவலகங்களில் ஒருவர்கூட பத்திரப்பதிவு செய்ய முன்வரவில்லை.

ஊரடங்கு தொடர்வதால் பத்திர பதிவு செய்வோர் வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது பத்திரம் தயார் செய்பவர்கள், பத்திரம் பதிவு செய்பவர்களுக்கு கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளித்தால் மட்டுமே பதிவாளர் அலுவலகங்கள் முழு அளவில் செயல்பட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி