ஆப்நகரம்

மகரஜோதிக்கு சபரிமலை தரிசனம்... திருநங்கை ஐயப்ப பக்தர்கள் கோரிக்கை!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடைபெற உள்ள மகரஜோதி பூஜைக்கு தமிழக ஐயப்ப பக்தர்களுக்கு கேரள அரசு கொரானா கட்டுப்பாடுகளை தளர்த்தி அனுமதி வழங்க வேண்டுமென்று திருநங்கை ஐயப்ப பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Samayam Tamil 8 Jan 2021, 11:01 pm
தமிழகத்தில் கார்த்திகை முதல் நாளன்று ஐயப்பன் கோவிலுக்கு மாலை அணிந்து விரதம் இருந்து 18 படி ஏறி ஐயப்பனை தரிசனம் செய்வது வழக்கம்.
Samayam Tamil கோப்பு படம்
சபரிமலை ஐயப்பன் கோயில் -மகரஜோதி 2021


ஆனால் இந்த ஆண்டு கொரானா வைரஸ் பாதிப்பு காரணமாக பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் தமிழகத்தில் இருந்து ஐயப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது.

இந்நிலையில் சென்னையைச் சேர்ந்த திருநங்கை சாம்பவி தலைமையில் 15க்கும் மேற்பட்ட திருநங்கை ஐயப்ப பக்தர்கள் கேரளாவில் உள்ள அய்யப்பன் கோவிலுக்கு செல்ல அனுமதி இல்லாததால் பெரும் ஏமாற்றம் அடைந்தனர்.

பொங்கல் பரிசை தராமல் ரேஷன் கடை ஊழியர் செஞ்ச வேலைய பாருங்க மக்களே!

அவர்கள், தென்காசி மாவட்டம் சாம்பவர் வடகரையில் உள்ள ஐயப்பன் கோவிலுக்கு செல்வதற்காக பயணத்தை மேற்கொண்டனர். நெல்லை தாமிரபரணி ஆற்றில் நீராடி ஐயப்பனுக்கு சிறப்பு பூஜைகளை செய்தனர்.

இதைத்தொடர்ந்து கடந்த 16 வருடமாக ஐயப்பன் கோவிலுக்கு சென்று வருகிறோம். இந்த ஆண்டு ஐயப்பன் கோவிலுக்கு செல்வதற்கு கேரள அரசு கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளதால் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளோம்.

கொரோனா தடுப்பூசி ஒத்திகையில் என்னென்ன அப்சர்வேஷன்? -கலெக்டர் விளக்கம்!

மகரஜோதிக்கு ஏராளமான பக்தர்கள் ஐயப்பனை தரிசிக்க வேண்டும் என்று விரதம் இருந்து வருகின்றனர். ஆகவே கேரள அரசு கொரானா கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அறிவித்து அதிக அளவில் தமிழக ஐயப்ப பக்தர்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று திருநங்கை ஐயப்ப பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அடுத்த செய்தி