ஆப்நகரம்

தென்காசி மாவட்டத்தின் இரண்டாவது ஆட்சியராக சமீரன் இன்று பொறுப்பேற்பு

மீன்வளத்துறை இயக்குநராக இருந்த சமீரன் தென்காசி மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டார்.

Samayam Tamil 15 Nov 2020, 11:10 pm
திருநெல்வேலி மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து தென்காசியை தலைமையிடமாகக் கொண்டு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 22-ம் தேதி புதிய மாவட்டமாக தென்காசி உதயமாகியது. தென்காசி மாவட்டத்தின் முதல் ஆட்சியராக அருண் சுந்தர் தயாளன் நியமிக்கப்பட்டார்.
Samayam Tamil tenkasi jn


இந்நிலையில் மாவட்டம் உருவாக்கப்பட்டு ஓராண்டு முடிவதற்குள் தென்காசி மாவட்ட ஆட்சியர் அருண் சுந்தர் தயாளன் இடமாற்றம் செய்யப்பட்டு, சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை இணைச் செயலாளராக நியமிக்கப்பட்டார். மீன்வளத்துறை இயக்குநராக இருந்த சமீரன் தென்காசி மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டார்.

அதனைதொடர்ந்து தென்காசி மாவட்டத்தின் இரண்டாவது ஆட்சியராக .சமீரன் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக்கொண்டார். பின்னர் அவர் கூறும்போது, அரசின் வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும். இதற்கு முன்பு இருந்த ஆட்சியர் விட்டுச் சென்ற பணிகளை தொடர்ந்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

அடுத்த செய்தி