ஆப்நகரம்

கர்ப்பிணிப் பெண்ணுக்கு திமுக வேட்பாளர் ரத்தம் கொடுத்து உயிரைக் காத்தார்!

ரத்தம் தேவைப்படுகிறது எனத் தகவல் கிடைத்தவுடன் சங்கரன்கோவில் திமுக வேட்பாளர் ராஜா தாமாக முன்வந்து ரத்ததானம் செய்தார்.

Samayam Tamil 24 Mar 2021, 7:24 pm
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கர்ப்பிணிப்பெண் ஒருவருக்கு திமுக வேட்பாளர் ராஜா ஓடிச் சென்று ரத்தம் கொடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளராக வழக்கறிஞர் ராஜா போட்டியிடுகிறார்.

தொகுதியில் தொடர்ந்து தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வரும் நிலையில் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் பூமா என்ற கர்ப்பிணிப் பெண்ணுக்கு ரத்தம் தேவைப்படுவதாக சமூக வலைதளங்களில் மூலம் செய்தி ஒன்று பரவியது.

என்னது எலக்ஷனை ரத்து செய்யணுமா?- நெல்லை கலெக்டர் ஆபிசில் பரபரப்பு!

இந்த தகவலையடுத்து சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் ராஜா தாமாக முன்வந்து சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் இன்று ரத்த தானம் வழங்கினர்.

திமுக வேட்பாளரின் இந்த செயல் காரணமாகக் கர்ப்பிணிப் பெண்ணின் குடும்பத்தினர் நன்றி தெரிவித்தனர். அதேவேளை மாவட்ட மக்கள் வேட்பாளர் ராஜாவுக்குப் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.

அடுத்த செய்தி