ஆப்நகரம்

அண்ணனைத் தொட்டபோது ஷாக் அடித்ததில் தங்கையும் பலி: மகள் நூல் இலையில் உயிர் தப்பினார்!

சங்கரன்கோவில் அருகே மக்காச்சோள தோட்டத்தில் அறுந்து கிடந்த மின்சாரக் கம்பியைத் தொட்டதில் ஒருவர் பின் ஒருவராக இருவர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 14 Jan 2021, 7:30 pm
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள கள்ளிக்குளம் கிராமத்தில் விவசாயிகள் விஜயராஜ் மற்றும் விஜயலட்சுமி சகோதர சகோதரிகள் விவசாய நிலம் வைத்துள்ளனர்.
Samayam Tamil அண்ணனைத் தொட்டபோது ஷாக் அடித்ததில் தங்கையும் பலி: மகள் நூல் இலையில் உயிர் தப்பினார்!
அண்ணனைத் தொட்டபோது ஷாக் அடித்ததில் தங்கையும் பலி: மகள் நூல் இலையில் உயிர் தப்பினார்!


இவர்கள் தங்களது விவசாய நிலத்தில் மக்காச்சோளம் பயிரிடப்பட்டு விவசாயம் செய்து வருகின்றனர். இந்நிலையில் பொங்கல் திருநாள் என்பதால் காலை சுமார் 7 மணிக்கு விஜயராஜ் தோட்டத்திற்குக் காப்புக் கட்ட வந்த நிலையில் மக்காச்சோள தோட்டத்தில் மின்சாரக் கம்பி அறுந்த கிடந்துள்ளது.

மின்சாரக் கம்பி குறித்து அறியாமல் எதிர்பாராத விதமாக அதை மிதித்ததில் மின்சாரம் தாக்கி விஜயராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். விஜயராஜ் தோட்டத்திற்கு 7 மணிக்குச் சென்ற நிலையில், 11 மணி ஆகியும் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, தனது சகோதரரைத் தேடிக் கொண்டு விஜயலட்சுமி தோட்டத்திற்குச் சென்றுள்ளார். அபோது தோட்டத்தில் விஜயராஜ் அசைவற்று விழுந்து கிடந்துள்ளார். இதைப் பார்த்தவுடன் அதிர்ச்சியடைந்த விஜயலட்சுமி, அவர் அருகே சென்று விஜயராஜ் உடலைத் தொட்டுள்ளார்.

மழையால் இடிந்த வீடுகள்... 300 கோழிகள் உயிரிழப்பு
அப்போது விஜயலட்சுமி மீது மின்சாரம் பாய்ந்துள்ளது. இதன் காரணமாக மின்சாரம் தாக்கி விஜயலட்சுமியும் பரிதாபமாக அதே இடத்தில் உயிரிழந்தார். இருவரையும் விஜயலட்சுமி மகள் தேடிச்சென்ற நிலையில், இறுதி நேரத்தில் சுதாரித்துக் கொண்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக குருவிகுளம் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் உடல்களை மீட்டு பிரேதப் ப‌ரிசோதனை‌க்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அடுத்த செய்தி