ஆப்நகரம்

தீப்பெட்டி விளையாட்டு 5 வயது சிறுமி கருகிப் பலி: நெல்லையில் அதிர்ச்சி!

நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே வீட்டில் தனியாகத் தீப்பெட்டியை வைத்து விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 15 Feb 2021, 3:54 pm
தீப் பெட்டியை வைத்து விளையாடியபோது உடலில் தீப்பிடித்து 5 வயது சிறுமி பலியான சம்பவம் நெல்லை மாவட்டத்தில் நிகழ்ந்துள்ளது. இந்த விபத்து குறித்து நாங்குநேரி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் .
Samayam Tamil தீப்பெட்டி விளையாட்டு 5 வயது சிறுமி கருகிப் பலி: நெல்லையில் அதிர்ச்சி!


நெல்லை மாவட்டம் தெற்கு இளையாற்குளம் பகுதியைச் சேர்ந்தவர் முருகன்-பால்மணி தம்பதியர். இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இருவரும் விவசாய கூலி.

இவர்கள் தங்களது வீட்டின் அருகே உள்ள உறவினர்களிடம் குழந்தைகளை பார்த்துக் கொள்ளும்படி அவர்களிடம் ஒப்படைத்துவிட்டு வேலைக்குச் செல்வது வழக்கம்.

அதேபோல், கடந்த 23ஆம் தேதி முருகன் தம்பதி வேலைக்குச் சென்றிருந்தனர். அப்போது முருகன் தம்பதியின் கடைசி மகள் லட்சுமி(5) தீப்பெட்டியை வைத்து விளையாடிக் கொண்டிருந்ததாகத் தெரிகிறது.

கிணற்றில் விழுந்த கர்ப்பிணி பசு... தென்காசி அருகே பரபரப்பு!

இந்த விளையாட்டின்போது சிறுமியின் உடலில் தீப்பிடித்துள்ளது. எரிச்சல் காரணாமாக அந்த நேரத்தில் குழந்தை அலரியுள்ளது. குழந்தையின் அலறல் சத்தம் கேட்ட உறவினர்கள் உடனடியாக சிறுமியை மீட்டு அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காகக் கொண்டு சென்றனர்.

10 தினங்களுக்கு மேலாகத் தீக்காய சிறப்புச் சிகிச்சைப் பிரிவில் மருத்துவர் கண்காணிப்பிலிருந்த சிறுமி லட்சுமி இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து நாங்குநேரி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விளையாடிக் கொண்டிருந்த சிறுமி தீ விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி