ஆப்நகரம்

நெல்லையில் இருந்து தீபாவளிக்கு சிறப்பு ரயில்கள்: மக்கள் மகிழ்ச்சி!

தீபாவளிப் பண்டிகையை ஒட்டி திருநெல்வேலியிலிருந்து சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டது நெல்லை மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 10 Oct 2020, 10:13 pm
கொரோனா நோய்த்தொற்று காரணமாக நாடு முழுவதும் பொதுப் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, நாட்டின் முக்கிய வழித்தடங்களில் சிறப்பு ரயில்கள் மட்டும் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களை முறையாக பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Samayam Tamil Diwali Special Trains


இந்த சூழலில் வரும் நவம்பர் 16ஆம் தேதி நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. எனவே பொதுமக்கள் பொதுப் போக்குவரத்து மூலம் அதிகளவில் வெளியூர்களுக்கு பயணம் செய்வர். அதில் முக்கியமானது ரயில்கள்.

வழக்கமாக தீபாவளியை ஒட்டி சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். அந்த வகையில் இம்முறையும் பொதுமக்களின் வசதிக்காக தீபாவளி சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதில் நெல்லை மக்களுக்கு மகிழ்ச்சியூட்டும் அறிவிப்பு இடம்பெற்றுள்ளது.

தீபாவளிக்கு 200 சிறப்பு ரயில்கள்..! சென்னையில் இருந்து எவ்வளவு ட்ரைன்?

அதாவது, வரும் 15ஆம் தேதி முதல் நவம்பர் மாதம் 30ஆம் தேதி வரை குஜராத் மாநிலம் ராம்நகரில் இருந்து சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இது திருவனந்தபுரம், நாகர்கோவில் வழியாக நெல்லையை சென்றடைகிறது. இந்த சிறப்பு ரயில் ஞாயிறு மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இரவு 8 மணிக்கு புறப்படுகிறது.

இதேபோல் நெல்லையில் இருந்து குஜராத் மாநிலம் ராம்நகருக்கு திங்கள் மற்றும் செவ்வாய் ஆகிய நாட்களில் இரவு 7.45 மணிக்கு சிறப்பு ரயில்கள் புறப்படுகின்றன. மேலும் பல்வேறு முக்கிய நகரங்களை இணைக்கும் வண்ணம் தீபாவளி சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அடுத்த செய்தி