ஆப்நகரம்

வில்லுப்பாட்டு மூலம் மெட்ராஸ் ஐ விழிப்புணர்வு: மாணவர்களுக்கு கலை இலக்கிய போட்டிகள்!

வில்லுப்பாட்டு மூலம் மெட்ராஸ் ஐ குறித்து மாணவர்கள் நெல்லையில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Authored byமரிய தங்கராஜ் | Samayam Tamil 1 Dec 2022, 11:29 am
அரசு பள்ளி மாணவர்களின் கலை திறனை மேம்படுத்தும் வகையில் நெல்லையில் வட்டார அளவிலான கலை போட்டிகள் நடைபெற்றது. இதில் வில்லுப்பாட்டு மூலம் மெட்ராஸ் ஐ குறித்து மாணவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்
Samayam Tamil villupattu awareness


பள்ளி மாணவர்களின் கலை திறன்களை வெளியே கொண்டு வரும் விதமாக அரசு பள்ளிகளில் பயிலும் லட்சக்கணக்கான மாணவர்கள் பயன்பெறும் வகையில் பள்ளி, வட்டாரம், மாவட்டம் மற்றும் மாநில அளவிலான கலைத் திருவிழா போட்டிகள் நடத்தப்பட உள்ளதாக சட்டமன்றத்தில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு வெளியிட்டார்.

இதையொட்டி தமிழகத்தில் உள்ள பல்வேறு கலை வடிவங்களை அறிமுகப்படுத்தி மாணவர்களின் கலைத்திறனை வெளியே கொண்டு வரும் வகையில் பள்ளி கல்வி செயல்பாடுகளில் ஒரு பகுதியாக கலைப்பண்பாட்டுக் கொண்டாட்டங்களை ஒருங்கிணைத்து அரசு நடுநிலை பள்ளி, உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவர்களுக்கு கலைத் திருவிழா போட்டிகள் நடத்தபட்டு வருகிறது.
எட்டு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!
அதன்படி நெல்லை மாவட்டத்தில் பள்ளிகள் அளவில் கலை போட்டிகள் நடத்தபட்டது. இதன் தொடர்ச்சியாக நேற்று வட்டார அளவிலான போட்டிகள் பாளையங்கோட்டையில் உள்ள காது கேளாதோர் பள்ளியில் வைத்து நடைபெற்றது. இதில் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த ஆறு முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டு கலை நிகழ்ச்சிகள், மொழித்திறன், நுண் கலைத்திறன், நாடகம், இசை போன்ற பல்வேறு போட்டியில் பங்கேற்றனர்.

குறிப்பாக கிராமிய கலைகளில் ஒன்றான வில்லுப்பாட்டு மூலம் மெட்ராஸ் ஐ நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மெட்ராஸ் ஐ என்றால் என்ன அதிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்வது எப்படி என்பது குறித்து வில்லுப்பாட்டு மூலம் மாணவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தியது அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.
நெல்லை மாநகராட்சி கூட்டத்தில் காரசார விவாதம்: சொந்த செலவில் கற்றல் மையம் அமைத்துக் கொடுத்த ஆணையர்!
அப்போது போட்டியில் பங்கேற்ற மாணவர்கள் சிலர் மெட்ராஸ் ஐ என்றால் திருநெல்வேலி ஐ என்று வருமா என்று கலகலப்புடன் காமெடியாக பேசினர். தொடர்ந்து மாவட்ட அளவிலும் மாநில அளவிலும் இந்த கலைப் போட்டிகள் நடத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
எழுத்தாளர் பற்றி
மரிய தங்கராஜ்
காட்சி தொடர்பியல் துறை பட்டதாரி. சினிமா, அரசியல் சார்ந்து எழுதுவதில் பெரும் விருப்பம் கொண்டவர். டிஜிட்டல் ஊடகத்தில் ஆறு ஆண்டுகள் அனுபவம். தமிழ் சமயம் ஊடகத்தில் சீனியர் டிஜிட்டல் கண்டட் புரொடியூசராக அரசியல் சாந்த செய்திகள், கட்டுரைகளை கடந்த மூன்றாண்டுகளாக எழுதி வருகிறார்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி