ஆப்நகரம்

நெல்லையில் மணல் கடத்தலுக்கு உதவிய எஸ்.ஐ. சஸ்பெண்ட்!

மணல் கடத்தலுக்கு உதவியதாக நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் காவல்நிலைய உதவி ஆய்வாளர் நெல்லை சரக டிஐஜி உத்தரவின் பேரில் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்

Samayam Tamil 18 Sep 2020, 11:02 pm
நெல்லை மாவட்டத்தில் சட்டவிரோதமாக மணல் திருடுபவர்கள் குண்டர் சட்டத்தில் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகிறார்கள். நெல்லை மாவட்டத்தில் மணல் திருட்டில் ஈடுபடுவோர் மீதும் அதற்கு துணை புரிவார் மீதும் பாரபட்சமின்றி கடுமையான நடவடிக்கை எடுக்க நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் ஏற்கனவே உத்தரவு பிறப்பித்திருந்தார்.

இந்த நிலையில் நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் மணல் கடத்தல் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த சம்பவத்திற்கு உதவியாக வீரவநல்லூர் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவல் நிலைய உதவி ஆய்வாளர் கார்த்திகேயன் இருந்துவருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணனுக்கு ரகசிய கிடைத்துள்ளது.

அதன் அடிப்படையில் விசாரணை நடத்திய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் பரிந்துரையின் பேரில் நெல்லை சரக டிஐஜி பிரதீப்பின் உத்தரவின் படி வீரவநல்லூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் கார்த்திகேயன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

அதிமுகவை அவமானப்படுத்தி போஸ்டர்கள், சூர்யா ரசிகர்கள் மீது வழக்குப் பதிவு!

ஏற்கனவே மணல் கடத்தலுக்கு உடந்தையாக இருந்ததாக மூலைக்கரைப்பட்டி காவல் நிலைய காவலர் லட்சுமிநாராயணன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார் நிலையில், தற்போது மெலும் ஒரு காவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். நெல்லை மாவட்டத்தில் மணல் கடத்தலுக்கு உடந்தையாக இருந்ததாக போலீசார் பலர் தொடர்ந்து சஸ்பெண்ட் செய்யப்படுவது பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி