ஆப்நகரம்

மகாளய அமாவாசை... கொரோனாவால் கலையிழந்த தாமிரபரணி

நெல்லை மாநகர் மற்றும் மாவட்ட பகுதிகளில் தாமிரபரணி ஆற்றின் முக்கிய படித்துறைகளில் பொதுமக்கள் கூடாத வண்ணம் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Samayam Tamil 17 Sep 2020, 1:14 pm
கொரோனா ஊரடங்கு காரணமாக, புரட்டாசி மஹாளய அமாவாசை தினத்தில் தாமிரபரணி ஆற்றங்கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய தடைவிதிக்கப்பட்டது. இந்நிலையில் ஆற்றங்கரை பகுதியில் மக்கள் கூட்டம் இல்லாமல் வெறிச்சோடிக் காணப்பட்டது. மேலும் ஆற்றின் படித்துறை பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.
Samayam Tamil thamirabharani river


புரட்டாசி மஹாளய அமாவாசை தினமான இன்று புண்ணிய தீர்த்தங்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது வழக்கம் . நெல்லை மாவட்டத்தில் தாமிரபரணி நதியில் ஏராளமானவர்கள் அதிகாலை முதலே தர்ப்பணம் செய்து முன்னோர் வழிபாட்டில் ஈடுபடுவார்கள்.

ஆனால் இந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளதால் தாமிரபரணி ஆற்றில் தர்ப்பணம் செய்ய தடைவித்து நெல்லை மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. இதனையடுத்து நெல்லை மாநகர் மற்றும் மாவட்ட பகுதிகளில் தாமிரபரணி ஆற்றின் முக்கிய படித்துறைகளில் பொதுமக்கள் கூடாத வண்ணம் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

பள்ளிகள் திறப்பு: தமிழக அரசின் முடிவில் திடீர் மாற்றம்!

அத்துடன் பல இடங்களில் தடுப்புகள் வைத்து போலீசார் சாலையை அடைத்திருந்தனர். இதுபோன்று குற்றாலம் அருவியிலும் ஏராளமானவர்கள் தர்ப்பணம் செய்ய வருவார்கள். இந்த முறை அங்கும் தடை விதிக்கப்பட்டு அருவிப் பகுதிக்கு யாரும் செல்லாத வகையில் போலீசார் தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் . இதனால் தாமிரபரணி ஆறு , குற்றால அருவிகள் பொதுமக்கள் கூட்டமின்றி வெறிச்சோடிக் காணப்பட்டது.

அடுத்த செய்தி