ஆப்நகரம்

மான் வேட்டையாடிக் கொண்டிருந்த 3 பேரை, வனத்துறை பிடித்து ஃபைன் போட்ட கதை!

தென்காசி மாவட்டத்தில் மான் வேட்டைக்குச் சென்றவர்களை கையும் களவுமாகப் பிடித்த வனத்துறையினர் அவர்களுக்கு உரியத் தண்டனையைப் பெற்றுத் தந்தனர்...

Samayam Tamil 27 Aug 2020, 10:01 pm
தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே வனப்பகுதிக்குள் மான் வேட்டைக்குச் சென்ற 3 பேரைக் கைது செய்த வனத்துறையினர் ரூ. 60 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
Samayam Tamil மான் வேட்டையாடிக் கொண்டிருந்த 3 பேரை, வனத்துறை பிடித்து ஃபைன் போட்ட கதை!
மான் வேட்டையாடிக் கொண்டிருந்த 3 பேரை, வனத்துறை பிடித்து ஃபைன் போட்ட கதை!


சிவகிரி அருகே உள்ள மேற்குத் தொடர்ச்சி மலை வனப்பகுதியில் மான், மிளா, கரடி, காட்டு எருமை, யானை, காட்டுப்பன்றி உள்ளிட்ட அரியவகை விலங்கினங்கள் உள்ளன. இந்த விலங்குகளை அப்பகுதியைச் சேர்ந்த சிலர் சட்டவிரோதமாக வேட்டையாடி வருவதாக வனத்துறைக்கு அவ்வப்போது தகவல் கிடைத்து வந்தது.

இதற்கிடையே குறிப்பிட்ட வனப்பகுதிக்குள் குறிப்பாக தேவியாறு பீட் பகுதியில் மர்ம நபர்கள் சிலர் மான் வேட்டையில் ஈடுபடுவதாக வனத்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. தகவலின் பெயரில் காட்டுக்குள் ரோந்து சென்ற வனத்துறையினர், குறிப்பிட்ட பகுதியில் சம்பந்தமில்லாமல் சுற்றித்திரிந்த 3 பேரை மறித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள சுந்தர் ராஜபுரத்தைச் சேர்ந்த பேச்சி ராஜா, ஆனந்தகுமார், கணேசன் என்பது தெரியவந்தது. இந்த 3 பேரும் சேர்ந்து காட்டுப்பன்றி, மான் உள்ளிட்டவற்றை வேட்டையாட வந்திருப்பதும் விசாரணையில் தெரியவந்தது.

10 வருஷ தேடுதல் வேட்டை; வசமா சிக்கிய தில்லாலங்கடி கொள்ளையன்!

அவர்களிடமிருந்து வேட்டைக்குப் பயன்படும் டார்ச் லைட், பேட்டரி, ஒலி எழுப்பும் கருவி உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து வேட்டையாட வந்த 3 பேருக்கும் வனத்துறையினர் தலா ரூ. 20 ஆயிரம் வீதம் ரூ. 60 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

இந்த பகுதியில், வனவிலங்குகளை வேட்டையாடும் நோக்கத்தோடு வனப்பகுதிக்குள் வருபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.

அடுத்த செய்தி