ஆப்நகரம்

உழவர் சந்தையில் நுழைந்த கலெக்டர்; வியாபாரிகளின் கோரிக்கை நடக்குமா?

உழவர் சந்தைக்குள் கலெக்டர் திடீரென நுழைந்து ஆய்வு செய்தார். அப்போது கலெக்டரிடம் வியாபாரிகள் முக்கிய கோரிக்கையை நிறைவேற்றுமாறு வலியுறுத்தினர்.

Samayam Tamil 28 Apr 2022, 4:07 pm
தென்காசி மாவட்டத்தில் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு அருகே அமைந்து இருக்கும், உழவர் சந்தை கடந்த 2000ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இங்கு, 60 கடைகள் அமைக்கப்பட்டு உள்ள நிலையில் தற்போது 9 கடைகள் மட்டுமே இயங்கி வருகிறது.
Samayam Tamil வியாபாரிகள்
வியாபாரிகள்


இந்த உழவர் சந்தையில் மாதம் ஒன்றுக்கு சுமார் ரூபாய் 40 லட்சம் மதிப்பிலான 1 லட்சம் கிலோ காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதற்கிடையே தனியார் வியாபாரிகளின் ஆதிக்கத்தால் உழவர் சந்தைக்கு வரும் மக்கள் வரத்து கணிசமாக குறைந்துள்ளது.

இதனால் உழவர் சந்தையில் விற்பனை மந்தமாகி வருகிறது. இதன் காரணமாக உழவர் சந்தையில் வணிகம் மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு நாள் ஒன்றுக்கு 5 கிலோ வரையில் காய்கறிகள் விற்பனை ஆவதே கேள்விக்குறியாகும் நிலை ஏற்பட்டு உள்ளது.

இனி பள்ளி வளாகத்திலேயே சலூன்; அதிர்ச்சியில் உறைந்த மாணவர்கள்!

இந்த நிலையில் இதனை சரிசெய்யும் வகையில் தென்காசி மாவட்ட ஆட்சியர் கோபால் சுந்தர்ராஜ் இன்று தென்காசி உழவர் சந்தைக்கு நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது, விவசாயிகளிடம் மாவட்ட கலெக்டர் குறைகளை கேட்டறிந்தார். மேலும், உழவர் சந்தையை பொதுமக்கள் அதிகம் கூடும் இடத்தில் அமைக்க வேண்டும் என விவசாயிகளும், வணிகர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வச்சி செய்த எம்.பி; சொல்ல முடியாமல் தவிக்கும் அண்ணாமலை!

இது குறித்து வியாபாரிகள் கூறுகையில், ‘இங்கு வியாபாரம் எதுவும் ஆவது இல்லை. எவ்வளவு வியாபாரம் ஆன சந்தை இது. இன்றைக்கு சுத்தமாக வியாபாரமே இல்லை. எனவே சந்தையை வேறு இடத்துக்கு கலெக்டர் மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

அடுத்த செய்தி