ஆப்நகரம்

பழங்குடியின மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய உத்தரவிட்ட தென்காசி ஆட்சியர்

பழங்குடியின மக்களுக்கு தேவையான அடிப்படைவசதிகள் செய்து கொடுக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு தென்காசி ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இதனால் அந்த மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Samayam Tamil 24 Sep 2020, 10:17 pm
தென்காசி: தென்காசி மாவட்டத்தில் பழங்குடியின மக்களுக்கு அடிப்படை தேவைகள் செய்து கொடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் உறுதி அளித்துள்ளார்.
Samayam Tamil ஆய்வு செய்த ஆட்சியர்
ஆய்வு செய்த ஆட்சியர்


தென்காசி மாவட்டம் புளியங்குடி நகராட்சி கோட்டை மலையாறு பகுதியில் 20க்கும் மேற்பட்ட பழங்குடி குடும்ப மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் காட்டுப்பகுதியில் ஆடு மேய்பது, மலைத்தேன் சேகரிப்பது போன்ற தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தங்களுக்கு அரசு சார்பில் கட்டிக்கொடுக்கப்பட்ட வீடுகள் 40ஆண்டுகள் மேலான நிலையில் சிதலமடைந்து இருப்பதால் அதனை சீரமைத்து தரக்கோரியும், குடிநீர் உள்ளிட்ட அடிப்படைவசதிகளை செய்து தரக்கோரியும் அப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தர்.

திருநெல்வேலி: மணல் கடத்த உதவிய எஸ்.ஐ. உட்பட 5 பேர் சஸ்பெண்ட்

இதனை தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் அருண் சுந்தர் தயாளன் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டு பழங்குடி மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அதன் அடிப்படையில் பழங்குடியின மக்களின் குடியிருப்புகளை சீரமைக்கவும் , மின்விளக்கு வசதிகள் செய்து கொடுக்கவும் மற்றும் தேவையான அடிப்படைவசதிகள் செய்து கொடுக்கவும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

அடுத்த செய்தி