ஆப்நகரம்

சமாதனப் புறா பறக்கவிட்டு குடியரசு தினம் கொண்டாடிய மாவட்ட ஆட்சியர்

மூவர்ண பலூன் மற்றும் சமாதானப் புறாவை பறக்கவிட்டு, தென்காசி மாவட்ட ஆட்சியர் சமீரன் குடியரசு தினவிழாவைக் கொண்டாடினார்.

Samayam Tamil 26 Jan 2021, 11:05 am
தென்காசியில் 72வது குடியரசு தின விழாவையொட்டி மூவர்ண கொடியை ஏற்றி வைத்து, 80இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் சமீரன் பயனாளிகளுக்கு வழங்கினார்.
Samayam Tamil சமாதானப் புறா


நாடு முழுவதும் 72வது குடியரசு தினவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் தென்காசி மாவட்டம் உதயமாகி கொண்டாடப்படும் 2வது குடியரசு தின விழா ஈஸ்வரன் பிள்ளை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெற்றது.

இதில் மாவட்ட ஆட்சியர் சமீரன் தேசிய கொடியை ஏற்றி வைத்து காவல் கண்காணிப்பாளர் சுகுனா சிங் தலைமையிலான காவல்துறை அணிவகுப்பை பார்வையிட்டார். மேலும் மூவர்ண பலூன் மற்றும் சமாதானப் புறாவை பறக்கவிட்டு, காவலர், தீயணைப்பு துறையினர் என 372 நபர்களுக்கு பாரட்டு பதக்கங்கம், மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். இதனை தொடர்ந்து தியாகிகளை கெளரவித்தார்.

மிஸ்டர் வேலுமணி... இரவோடு இரவாக ஒட்டப்பட்ட போஸ்டர்களால் பரபரப்பு

மேலும் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர், சமூக பாதுகாப்பு திட்டம், வேளாண்மை துறை, தோட்டக்கலை துறை என 100க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு 80இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் அணைவரும் கரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை பின்பற்றி முககவசம் அணிந்து கலந்து கொண்டனர்.

அடுத்த செய்தி