ஆப்நகரம்

இடி இடித்தது, தண்ணீர் சொட்டியதால் தாக்கியது மின்சாரம் இளைஞர் பலி..?

தென்காசி மாவட்டத்தில் கையில் பைப் வைத்திருந்த இளைஞர் இடி இடித்தபோது மின்சாரம் தாக்கியதால் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.

Samayam Tamil 3 Nov 2020, 12:29 pm
தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் இடி இடித்தபோது மின்சாரம் தாக்கியதால் வாலிபர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Samayam Tamil இடி இடித்தது, தண்ணீர் சொட்டியதால் தாக்கியது மின்சாரம் இளைஞர் பலி..?
இடி இடித்தது, தண்ணீர் சொட்டியதால் தாக்கியது மின்சாரம் இளைஞர் பலி..?


தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அக்கினி மாடசாமி கோயில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் பிச்சு மணி. இவரது மகன் சொரிமுத்து. வயது 20. ஆலங்குளம் தென்காசி சாலையில் உள்ள தனியார் ஆட்டோ மொபைல்ஸ் கடையில் வேலைபார்த்து வந்தார்.

இவர் வழக்கம் போல் பணிக்குச் சென்றிருந்த சொரிமுத்து, இரு சக்கர வாகனம் ஒன்றிற்கு வாட்டர் சர்வீஸ் செய்து கொண்டிருந்துள்ளார். அப்போது ஆலங்குளம் பகுதியில் திடீரென பலத்த இடி இடிக்க மழை கொட்டியுள்ளது.

நிரம்பிய வழிந்த நீர்த்தேக்கம்...தடையை மீறி குளிக்கச் சென்றதால் வந்த வினை

இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சொரிமுத்து தனி அறையில் உள்ள மின் மோட்டாரை நிறுத்த சென்றுள்ளார். அப்போது சொரிமுத்து கையில் வாட்டர் சர்வீஸ் பைப்பை பிடித்தபடி உள்ளே சென்றுள்ளார். அப்போது இடி இடித்துள்ளது. அதேவேளை சொரிமுத்து மீது மின்சாரம் தாக்கியுள்ளது.

திடீரென அலறல் சத்தம் கேட்டுள்ளது. இதையடுத்து சக ஊழியர்கள் பதற்றமடைந்து சொரிமுத்துவை சென்று பார்த்துள்ளனர். அவர் பேச்சு மூச்சற்று கீழே சரிந்து கிடந்துள்ளார். உடனடியாக அவரை மீட்ட சக ஊழியர்கள், சொரிமுத்துவை ஆலங்குளம் அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காகக் கொண்டு சென்றனர்.

அங்கு சொரிமுத்துவை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் முன்னதாகவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து ஆலங்குளம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த அதிர்ச்சி சம்பவம் அந்த ஊரையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

அடுத்த செய்தி