ஆப்நகரம்

5 ஆண்டுகளுக்கு மேல் தங்கியோர்க்கு பட்டா வழங்கிய தென்காசி எம்.எல்.ஏ.

தென்காசியில் 33 நபர்களுக்கு ரூ.57 இலட்சம் மதிப்பீட்டில் இலவச வீட்டுமனை பட்டாக்களை தென்காசி சட்டமன்ற உறுப்பினர் முன்னிலையில் மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.

Samayam Tamil 30 Jan 2021, 11:17 am
தமிழகத்தில் வீடற்ற ஏழை எளிய மக்களுக்கு இலவச வீட்டுமனை வழங்கும் விதமாக, ஆட்சேபனையற்ற அரசு புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமிப்பு செய்து வீடு கட்டி 5 வருடங்களுக்கு மேலாக குடியிருந்து வரும் நபர்களுக்கு அவர்களது ஆக்கிரமிப்பினை வரன்முறை செய்து வீட்டுமனை பட்டா வழங்க தமிழக அரசால் ஆணையிடப்பட்டுள்ளது.
Samayam Tamil பட்டா வழங்கும் எம்.எல்.ஏ.


அதனடிப்படையில், தென்காசி வட்டம், குற்றாலம் கிராமம், “பாட்டை” புறம்போக்கு நிலத்தில் குடியிருந்த நபர்களை கணக்கிட்டு, இன்று தமிழக அரசின் சிறப்பு திட்டத்தின் கீழ் சுமார் 1 சென்ட் வீதம் 33 நபர்களுக்கு வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்ட, ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தென்காசி சட்டமன்ற உறுப்பினர் செல்வ மோகன்தாஸ் பாண்டியன் முன்னிலையில், மாவட்ட ஆட்சித்தலைவர் சமீரன் ரூ.57 இலட்சம் மதிப்பிலான இலவச வீட்டுமனை பட்டாக்களை இன்று வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பயனாளிகள், அரசு அலுவலர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

கே.எஸ். ரவிக்குமாரிடம் மீண்டும் 'ராணா' படத்தின் கதையை கேட்ட ரஜினி?

மேலும் மாவட்டத்தில் தேவையுள்ள பயனாளர்களுக்கு இதேபோல் பட்டா வழங்கிட வேண்டும் என்று அரசுக்கு பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி