ஆப்நகரம்

விவசாயி வீட்டை உடைத்து மொத்த சொத்தையும் திருடிச் சென்ற மர்ம கும்பல்!

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே விவசாயின் வீட்டை உடைத்து 28 பவுன் மதிப்புள்ள தங்க நகை. ஒரு இலட்சம் ரூபாய் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுவிட்டனர். இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து கொள்ளையர்களைத் தேடி வருகின்றனர்.

Samayam Tamil 21 Jan 2021, 2:09 pm
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அடுத்த திருவேங்கடம் பகுதியிலுள்ள சங்கு பட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி நாராயணன். இவரது மனைவி ஆண்டாள். வயதான தம்பதியர்.
Samayam Tamil விவசாயி வீட்டை உடைத்து மொத்த சொத்தையும் திருடிச் சென்ற மர்ம கும்பல்!
விவசாயி வீட்டை உடைத்து மொத்த சொத்தையும் திருடிச் சென்ற மர்ம கும்பல்!


வழக்கம் போல் தனது வீட்டைப் பூட்டி விட்டு விவசாய தோட்டத்திற்குச் சென்று விவசாய வேலைகளைச் செய்து விட்டு வீடு திரும்பி வந்த போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்ததைப் பார்த்து நாரயணன் அதிர்ச்சியடைந்துள்ளார்.

தொடர்ந்து வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 28பவுன் மதிப்புள்ள தங்க செயின்கள், மோதிரம், கம்மல்கள், கொலுசு, மற்றும் ஒரு இலட்சம் ரூபாய் பணம் கொள்ளை அடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

செக் மோசடி... தலைமறைவான வங்கி ஏஜென்ட்டை தேடும் சங்கரன்கோவில் போலீஸ்!

இதனையடுத்து நாராயணன் திருவேங்கடம் காவல் நிலையத்திற்குத் தகவல் அளித்தார். தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு அங்குப் பதிந்திருந்த தடயங்களையும் பதிவு செய்து கொண்டனர்.

மேலும் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா கட்சிகளை வைத்தும் கொள்ளையர்களைத் தேடிவருகின்றனர். வீட்டை உடைத்து சுமார் பதினைந்து இலட்சம் மதிப்புள்ள பொருட்களைக் கொள்ளை அடித்துச் சென்ற சம்பவம் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி