ஆப்நகரம்

தை அமாவாசை... குற்றாலத்தில் குவிந்த பொதுமக்கள்!

தை அமாவாசையை முன்னிட்டு தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் தருவதற்காக ஏராளமான பொதுமக்கள் இன்று குற்றாலத்தில் குவிந்தனர்.

Samayam Tamil 11 Feb 2021, 10:34 am

ஹைலைட்ஸ்:

  • தை அமாவாசை அன்று கடல் உள்ளிட்ட நீர்நிலைகளில் இந்துக்கள் புனித நீராடுவது வழக்கம்.
  • தை அமாவாசையில் மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் தருவதும் இந்துக்களின் வழக்கமாக உள்ளது
  • தை அமாவாசையை போல, ஆடி அமாவாசை, புரட்டாசி மஹாளய அமாவாசை நாட்களிலும் இந்துக்கள் புனித நீராடுகின்றனர்
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil தை அமாவாசை - குற்றாலம்
தை அமாவாசை தினமான இன்று புனித நீராட குற்றாலத்தில் குவிந்த பொதுமக்கள்
ஆடி அம்மாவாசை, புரட்டாசி மகாளய அமாவாசை, தை அமாவாசை ஆகிய நாட்களில் ஹிந்துக்கள் புனித ஸ்தலங்களில், புனித நீர்நிலைகளில் தங்களது மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வருகின்றனர்.
இன்று தை அமாவாசையை முன்னிட்டு தமிழகத்தில் புனித ஸ்தலங்களான ராமேஸ்வரம், பாவநாசம், குமரி கடற்கரைகளில் ஏராளமானோர் தர்ப்பணம் செய்து வருகின்றனர்.

அதேபோல் குற்றாலத்தில் ஏராளமானோர் புனித நீராடி தங்கள் முன்னோருக்கு எள், அரிசி இரைத்து தர்ப்பணம் செய்தனர்.

மதுரை டூ ராமேஸ்வரம்... ரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்!

ஆடி அமாவாசை, புரட்டாசி அமாவாசை ஆகிய காலங்களில் குற்றாலத்தில் கொரோனா தொற்றால் தர்ப்பணம் கொடுக்க தடைவிதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தற்போது தடை நீக்கப்பட்டுள்ளதால் ஏராளமானோர் குற்றாலத்தில் குவிந்துள்ளனர்.

அடுத்த செய்தி