ஆப்நகரம்

சுவீட் கேட்டு போராடும் பா.ஜ.க; யாருக்கு என்பது தான் டுவிஸ்ட்!

இனிப்பு வழங்க கோரி பாஜகவினர் திருநெல்வேலியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். பாஜகவினர் வழங்க கோரும் இனிப்பு யாருக்கு என்பதை அறிந்து, பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஆச்சரியமும், மகிழ்ச்சியும் அடைந்தனர்.

Samayam Tamil 28 Oct 2021, 5:38 pm
தமிழகத்தின் அரசு போக்குவரத்து கழகங்களில் பணியாற்றும் பணியாளர்களுக்கு தமிழக போக்குவரத்து துறையின் சார்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இனிப்புகள் வழங்கப்பட உள்ளது.
Samayam Tamil பாஜக போராட்டம்
பாஜக போராட்டம்


முன்னதாக இந்த இனிப்புகள் அனைத்தையும் தனியார் நிறுவனத்திடம் இருந்து கொள்முதல் செய்ய திட்டமிடப்பட்ட நிலையில் பாரதிய ஜனதா கட்சி எதிர்வினையைப் பதிவு செய்தது.

இந்த நிலையில் ஆவின் நிறுவனத்திடம் இருந்து இனிப்புகள் கொள்முதல் செய்யப்பட்டு அரசு போக்குவரத்துத் துறை ஊழியர்களுக்கு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அரசு போக்குவரத்துத் துறை ஊழியர்களுக்கு தீபாவளி பண்டிகைக்கு இனிப்புகள் வழங்கப்படுவது போன்று கொரோனா பேரிடர் காலத்தில் முன்கள பணியாளர்களாக பணியாற்றிய தமிழக அரசு தூய்மைப் பணியாளர், செவிலியர்கள், காவல் துறையினர், மருத்துவர்கள் சுகாதார பணியாளர்களுக்கு தமிழக அரசின் சார்பில் தீபாவளி பண்டிகைக்கு இனிப்பு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.



இதுதொடர்பாக திருநெல்வேலி வண்ணாரப்பேட்டையில் இருந்து பாரதிய ஜனதா கட்சியினர் கோரிக்கை பதாகைகளை ஏந்தி, பேரணியாக திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் வரை வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குடைச்சல் தரும் தமிழக ஆளுநர் ரவி; கருப்பு கொடி ஏந்தும் திருமாவளவன்?

இதை தொடர்ந்து தமிழக அரசு தாமதிக்காமல் இனிப்புகள் வழங்குவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி பாஜகவினர் முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அடுத்த செய்தி