ஆப்நகரம்

ஒரே நாளில் இறந்த முதியவர்கள் எண்ணிக்கை.. பீதியில் உறைந்த மக்கள்!

கொரோனாவுக்கு ஒரே நாளில் இறந்த முதியவர்கள் எண்ணிக்கையை பார்த்து மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

Samayam Tamil 29 Jan 2022, 10:17 am
தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வந்த நிலையில் கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதம் 25ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு வருகிறது.
Samayam Tamil திருநெல்வேலி அரசு மருத்துவமனை
திருநெல்வேலி அரசு மருத்துவமனை



அதன்பிறகு கொரோனாவின் தாக்கம் குறைந்து வந்தது. இதனால் அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்து செயல்படுத்தியது. இதற்கிடையில் உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் தொற்று பரவல் அதிகரிக்க தொடங்கி இருக்கிறது.

டிஜிபி சைலேந்திர பாபு டென்ஷன்; போலீசுக்கு பறந்தது திடீர் உத்தரவு!

இதனால் அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்தது. அதன்படி கடைகள், ஓட்டல்கள், சினிமா திரையங்கு 50 சதவீதம் பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு நேர ஊரடங்கு என்று பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

இந்த இரவு நேர ஊரடங்கு தமிழகத்தில் தற்போது அமலுக்கு வந்துள்ளது. இந்த விதிமுறைகள் உடனடியாக வந்ததை அடுத்து தமிழக அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகள் கடைபிடிக்கப்பட்டு வருகிறதா? என அதிகாரிகள் அவ்வப்போது ஆய்வு செய்து வருகின்றனர்.

ஆடிப்போய் கிடக்கும் அதிமுக; பீதி கிளப்பிய டெல்லி உத்தரவு!

இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று கொரோனாவால் 416 பேர் பாதிக்கப்பட்டனர். இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 59 ஆயிரத்து 497 ஆக உயர்ந்துள்ளது.

இதற்கிடையே தனியார் மருத்துவமனைகளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 91 வயது மற்றும் 82 வயது முதியவர்கள் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தனர். மேலும் முதியோர் காப்பகத்தில் ஒருவர் கொரோனாவுக்கு பலியானார்.

பாஜக அண்ணாமலை டபுள் கேம்; வெளிச்சம் போட்ட அதிமுக!

கொரோனா வைரஸ் தொற்றுக்கு நேற்று ஒரே நாளில் மட்டும், 3 பேர் பலியான நிலையில் நெல்லை மாவட்டத்தில் கொரோனாவால் பலி ஆனோரின் எண்ணிக்கை 443 ஆக உயர்ந்து உள்ளது. இதனால் முதியவர்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

அடுத்த செய்தி