ஆப்நகரம்

வள்ளலாக மாறிய..ஜி.பி.முத்து; நெல்லை மக்களோ நெகிழ்ச்சி!

சாலையோர மக்களின் கண்ணீரை துடைத்து, டிக்டாக் புகழ் ஜி.பி.முத்து வள்ளலாக மாறியுள்ளார். இதை பார்த்த நெல்லை மக்கள் நெகிழ்ச்சியும், மகிழ்ச்சியும் அடைந்துள்ளனர்.

Samayam Tamil 29 Nov 2021, 8:18 am

ஹைலைட்ஸ்:

  • ஆதரவற்ற மக்களுக்கு போர்வை
  • வள்ளலாக மாறினார் ஜி.பி.முத்து
  • நெல்லை மக்களோ செம ஹேப்பி


ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil போர்வை வழங்கும் ஜி.பி.முத்து
போர்வை வழங்கும் ஜி.பி.முத்து
டிக்டாக் புகழ் ஜி.பி.முத்து நெல்லையில் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். இதன் பிறகு மழைக்காலத்தில் சாலை ஓரத்தில் வீடுகள் இல்லாமல் ஆதரவற்ற நிலையில் தவிக்கும் ஏழை எளிய மக்களுக்கு மழைக்காலத்தில் பயன்படும் படியாக போர்வைகள் மற்றும் பனி குல்லா வழங்கினார்.
இதன் பின்னர், நெல்லை சந்திப்பு ரயில் நிலையம் பகுதியில் வசிக்கும் ஆதரவற்றோருக்கு போர்வைகளை வழங்கினார். அப்போது டிக்டாக் புகழ் ஜி.பி.முத்துவை பார்த்த பொதுமக்கள் அப்பகுதியில் ஏராளமானோர் கூடினர். பின்னர் அவர்களுடன் செல்பி எடுத்து மகிழ்ச்சியில் ஆழ்த்தினர்.


இதை தொடர்ந்து ஜி.பி.முத்து செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் சாலை ஓரத்தில் ஆதரவற்று தவிக்கும் ஏழை எளிய மக்களுக்கு என்னால் முயன்ற உதவிகளை செய்து வருகிறேன்.

அரசு ஊழியர்களுக்கு திடீர் உத்தரவு; கட்டாயம் கடைபிடிக்க அறிவுறுத்தல்!

இன்று அவர்களுக்கு போர்வை மற்றும் பனிக் குல்லா வழங்கியது மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும் சாலை ஓரங்களில் ஆதரவற்று தவிக்கும் ஏழை எளிய மக்களுக்கு இலவச வீடு கட்டி கொடுக்க தமிழக அரசு முன்வர வேண்டும்.

முதல்வரிடம் போகும் பட்டியல்; செந்தில் பாலாஜி.. பர..பர!

நான் தொடர்ந்து மக்களை சிரிக்க வைப்பதோடு என்னால் முடிந்த உதவியை செய்வேன். ஜாதி மத அரசியலில் தலையிட போவதில்லை. தொடர்ந்து மக்களை மகிழ்விக்கும் முயற்சியில் ஜி.பி.முத்து செயல்படுவார். இவ்வாறு ஜி.பி.முத்து தெரிவித்தார்.

அடுத்த செய்தி