ஆப்நகரம்

தொடரும் கள்ளப் பணக் கடத்தல்: அனுதினமும் பறிமுதல்

சோதனைச் சாவடியில் தினந்தோறும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.

Samayam Tamil 13 Dec 2020, 8:23 am
தமிழக கேரள எல்லையான பகுதியான தென்காசி மாவட்டம் புளியரையில் அமைந்துள்ள சாலை போக்குவரத்து அலுவலக சோதனைச் சாவடியில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் திடீர் சோதனையில் 48 ஆயிரத்து 270 ரூபாய் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.
Samayam Tamil பணம் பறிமுதல்


தமிழகம் முழுவதும் உள்ள 16 சோதனை சாவடிகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் அதிகாலையில் தீடீர் சோதனையில் ஈடுபட்டனர். அதன் ஒரு பகுதியாக தென்காசி மாவட்டத்தில் தமிழக கேரள எல்லை பகுதியான புளியரையில் உள்ள சாலை போக்குவரத்து அலுவலக சோதனை சாவடியில் லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி எஸ்கால் தலைமையிலான அதிகாரிகள் தீடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

இந்த சோதனையின் போது தினந்தோறும் தமிழகத்தில் இருந்து அண்டை மாநிலமான கேரளாவுக்குச் செல்லும் வாகனங்கள் குறித்தும் முறையாக அரசு நிர்ணய கட்டணம் வசூல் செய்வது குறித்தும் ஆய்வு செய்தனர்.

ராஜா செல்லையா: ரஜினியைக் கொண்டாடி இவரை விட்டுட்டோமே!!!

பின்னர் இந்த சோதனையில் கணக்கில் இல்லாத 48 ஆயிரத்து 270 ரூபாய் பணத்தை அதிகாரிகள் கைபற்றி வட்டார போக்குவரத்து துறை அதிகாரி நீலவேணி மீது வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தீடீர் சோதனையால் புளியரை பகுதியில் வாகன ஓட்டிகளிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி