ஆப்நகரம்

​உலக சுற்றுலா தினத்தில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை டூர் கூட்டிச்சென்று அசத்திய மாநகராட்சி!

உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு நெல்லை மாநகராட்சி முதியோர் காப்பகத்தில் உள்ள 50-க்கும் மேற்பட்டோர் கிருஷ்ணாபுரம் வெங்கடாஜலபதி திருக்கோவிலுக்கு சுற்றுலா அழைத்து செல்லப்பட்டனர்.

Samayam Tamil 27 Sep 2021, 11:21 pm
நெல்லை மாநகராட்சி சார்பில் கடந்த நான்கு வருடங்களாக ஆதரவற்றோர் நல காப்பகம் நெல்லை குறுக்கு துறையில் இயங்கி வருகிறது. நெல்லை மாநகர பகுதிகளில் ஆதரவற்று சுற்றித் திரிபவர்கள், ரயில் நிலையங்களில் சுற்றித் திரியும் மனநலம் பாதித்தவர்கள் வயது முதிர்வு காரணமாக தெருவோரங்களில் யாசகம் பெறுவோர் என சுமார் 50க்கும் மேற்பட்டவர்கள் இந்த காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
Samayam Tamil திருநெல்வேலி


அவர்களுக்கு உணவு, இருப்பிடம், ஆடைகள் கொடுக்கப்பட்டு பாதுகாத்து வருகின்றனர். பல மாதங்களாக காப்பகத்தில் முடங்கியிருந்த அவர்களை உலக சுற்றுலா தினமான இன்று பிரசித்தி பெற்ற கிருஷ்ணாபுரம் அருள்மிகு வெங்கடாசலபதி சிற்ப கோயிலுக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

அவர்களுக்கு கோவில் உள்ள சிற்பங்களை கல்லூரி மாணவிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் காண்பித்து அதன் கலை நயத்தை விளக்கினர். மேலும், அவர்களுக்காக வெங்கடாஜலபதி திருக்கோயிலில் சிறப்பு வழிபாடுகளும் நடத்தப்பட்டன.

4 மாத கர்ப்பிணி ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்ணீர் போராட்டம்... காரணம் என்ன?
தாங்கள் பல மாதங்கள் காப்பகத்திற்கு உள்ளேயே இருந்து இன்று வெளி உலகத்திற்கு வந்தது, எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என்றும் ,அதுவும் கோயிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தது மனதுக்கு இதமாக உள்ளது என்றும் முதியவர்கள் மகிழ்ச்சியோடு தெரிவித்தனர்.

மனநலம் பாதித்தவர்கள், ஆதரவற்ற முதியோர்கள் கோயிலில் சுற்றி பார்ப்பதற்கு கல்லூரி பேராசியை சரஸ்வதி, காப்பாக பொறுப்பாளர் சரவணன் மற்றும் கல்லூரி மாணவிகள் தாமாகவே முன்வந்து உதவி செய்தனர் .

அடுத்த செய்தி