ஆப்நகரம்

அமெரிக்க நிறுவத்துடன் இணைந்து ஆன்லைன் பயிற்சி... திருநெல்வேலி ஆட்சியர் அழைப்பு

அமெரிக்க நிறுவனமான கோர்செரா நிறுவனத்துடன் இணைந்து வேலைவாய்ப்பற்ற 50 ஆயிரம் பேருக்கு இணையதளம் மூலம் 11 பிரிவுகளில் 4 ஆயிரத்திற்கும் அதிகமாக பாடங்களில் இலவசமாக பயிற்சி அளிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து உள்ளது.

Samayam Tamil 21 Oct 2020, 10:01 am
கொரோனா ஊரடங்காலும், அதனால் ஏற்பட்ட பெரும் பொருளாதாரச் சிக்கலின் விளைவாகவும் ஏராளமான இளைஞர்கள் வேலையிழந்துள்ளனர். இந்நிலையில், இளைஞர்கள் தங்களைத் தாங்களே தரம் உயர்த்திக் கொள்வதற்கு ஆன்லைன் பட்டயப் படிப்புகள் பெரிதும் உதவிகரமாக இருக்கும் என்பதை உணர்ந்து, தமிழக அரசின் திறன் மேம்பாட்டுத்துறை அமெரிக்க நிறுவனமான கோர்செராவுடன் கைகோர்த்துள்ளது.
Samayam Tamil நெல்லை மாவட்ட ஆட்சியரகம்


இந்தப் பயிற்சிகளில் கலந்து கொள்ள ஆன்லைனில் விண்ணப்பிக்குமாறு திருநெல்வேலி மாவட்ட இளைஞர்களுக்கு மாவட்ட ஆட்சியர் ஷில்பா அழைப்பு விடுத்துள்ளார்.

தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகமானது அமெரிக்க நிறுவனமான கோர்செரா நிறுவனத்துடன் இணைந்து வேலைவாய்ப்பற்ற 50 ஆயிரம் பேருக்கு இணையதளம் மூலம் 11 பிரிவுகளில் 4 ஆயிரத்திற்கும் அதிகமாக பாடங்களில் இலவசமாக பயிற்சி அளிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து உள்ளது.

புதிய தொழில் தொடங்கப் போறீங்களா? சென்னை ஆட்சியர் நற்செய்தி

அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இந்த நிறுவனம் 80 நாடுகளில் வகுப்புகளை நடத்தி வருகிறது. இந்த நிறுவனம் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் மற்றும் அரசு நிறுவனங்களுடன் கைகோர்த்து இணையவழியில் வகுப்பு நடத்தி சான்றிதழ் படிப்பு மற்றும் பட்டப்படிப்புகளை வழங்குகிறது. இந்த பயிற்சி முடிந்தவுடன் இணையம் வழியாக வேலைவாய்ப்பு முகாம் நடத்தி வேலைவாய்ப்பு அளிக்கப்படுகிறது.

இந்த பயிற்சி பெற விரும்புகிறவர்கள் தமிழ்நாட்டை சேர்ந்தவராகவும், 18 வயது பூர்த்தியாகி வேலைவாய்ப்பற்றவராகவும் இருக்க வேண்டும். பயிற்சி பெற ஆதார் அட்டை, மின்னஞ்சல் முகவரி, தொலைபேசி ஆகிய விவரங்களுடன் வருகிற 31-ந் தேதிக்குள் tnskill.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பமாக பதிவு செய்து கொள்ள வேண்டும்.

வேலைவாய்ப்பை பெற இது ஒரு சிறந்த வாய்ப்பாக அமையும் என்பதால், பல்வேறு மாவட்ட ஆட்சியர்களும் அவரவர் மாவட்ட இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்து வருகின்றனர்.

அடுத்த செய்தி