ஆப்நகரம்

முகக்கவசம் அணியாவிட்டால் அபராதம் நிச்சயம்: மாவட்ட ஆட்சியர் அதிரடி

முகக்கவசம் அணிவதில் பொதுமக்கள், ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இல்லாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் நெல்லை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 26 Nov 2020, 8:19 am
நெல்லை மாவட்டத்தில் கொரனோ தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக இன்று நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து பொதுமக்களுக்கு இலவசமாக முகக்கவசம் வழங்கும் நிகழ்ச்சி வண்ணாரப்பேட்டையில் நடைபெற்றது.
Samayam Tamil TNL collector


இதில் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு கலந்து கொண்டு பொதுமக்கள் மற்றும் வண்ணாரப்பேட்டை பகுதியில் உள்ள ஓட்டல்கள் டீக்கடைகள் ஜவுளி கடைகள் ஆகியவற்றில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு முகக்கவசங்களை இலவசமாக வழங்கினார். குறிப்பாக வண்ணாரப்பேட்டையில் உள்ள பிரபல தனியார் ஓட்டலுக்குள் திடீரென சென்ற மாவட்ட ஆட்சியர், அங்கிருந்த ஹோட்டல் நிர்வாகிகள் மற்றும் ஊழியர்களிடம் இதுதான் கடைசி வாய்ப்பு அனைவரும் கட்டாயமாக முக்க்கவசம் அணிய வேண்டும் என்று எச்சரித்தார்.

தொடர்ந்து வாடிக்கையாளர்கள் முகக்கவசம் அணிந்து உள்ளார்களா என்று மாவட்ட ஆட்சியர் ஹோட்டலுக்குள் ஆய்வு செய்தார் திடீரென மாவட்ட ஆட்சியர் வருவதை அறிந்து வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். சாப்பிட்ட கையோடு அவர்கள் மாவட்ட ஆட்சியருக்கு வணக்கம் தெரிவித்தனர்.

வலுவிழந்தது நிவர் புயல்... ஆனாலும் இன்னும் மழை இருக்காம்!

பதிலுக்கு மாவட்ட ஆட்சியர், சாப்பிடுங்கள் அதேசமயம் கட்டாயம் முகக்கவசம் அணியுங்கள் என்று அறிவுரை வழங்கி சென்றார் தொடர்ந்து வண்ணாரப்பேட்டை பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்த பொதுமக்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு இலவசமாக முகக்கவசங்களை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

அப்போது ஆட்டோ ஓட்டுநர்களிடம், தங்கள் வண்டியில் ஏறும் பயணிகள் கட்டாயம் முகக்கவசம் அணிவதை நீங்கள் தான் உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவித்தார் பின்னர் அந்த வழியாக வந்த பேருந்தில் திடீரென ஏறி பயணிகள் அனைவரும் முகக்கவசம் அணிந்துள்ளார்களா என ஆய்வு செய்தார்.

நிவர் புயல் கரையை கடந்தபின் என்ன நடக்கும்?

அப்போது முகக்கவசம் அணியாத பயணிகளுக்கு முகக்கவசம் வழங்கி அறிவுரை வழங்கினார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் விஷ்ணு நிருபர்களிடம் கூறுகையில், நெல்லை மாவட்டத்தில் பொதுமக்கள் அளித்த ஒத்துழைப்பால் கொரனோ தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

இருப்பினும் இரண்டாம் கட்டமாக தொற்றில் இருந்து பொதுமக்களை பாதுகாக்க இந்த விழிப்புணர்வு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது எனவே அனைவரும் கட்டாயமாக முக கவசம் அணிய வேண்டும் என்று தெரிவித்தார். தொடர்ந்து முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிப்பது தொடர்பாக கேள்வி எழுப்பிய போது, இது தொடர்பாக அரசாணையில் ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் பொதுமக்கள் ஒத்துழைப்பு அளித்தால் அபராதமோ தண்டனையோ வழங்கப்படாது அதேசமயம் ஒத்துழைப்பு அளிக்காத பட்சத்தில் நிச்சயம் அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவித்தார்.

அடுத்த செய்தி