ஆப்நகரம்

தாமிரபரணியில் குளிக்க, துவைக்க தடை?; கலெக்டர் அறிவிப்பால் பொதுமக்கள் ஷாக்!

தாமிரபரணி ஆற்றில் சோப்பு பயன்படுத்துவது தடை செய்யப்படும் என கலெக்டர் அறிவித்துள்ளதால் மக்கள் குளிக்க, துவைக்க முடியுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

Samayam Tamil 12 Jun 2022, 3:37 pm
நெல்லை உழவாரபணி குழுமம் சார்பில், நெல்லை நீர்வளம் திட்டத்தின் கீழ் தாமிரபரணி ஆற்றை சுத்தம் செய்யும் பணிகள் நடந்து வருகிறது. இந்த பணியில் சுமார் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு நெல்லை மாவட்டம் நாரணம்மாள்புரம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
Samayam Tamil தாமிரபரணி ஆறு
தாமிரபரணி ஆறு


இந்த பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் விஷ்ணு பணிகள் குறித்தும், தேவையான உதவிகள் குறித்தும் கேட்டறிந்தார்.இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து ஆட்சியர் விஷ்ணு கூறியதாவது:

நெல்லை நீர் வளம் திட்டத்தின் கீழ் கடந்த 8 மாதங்களில் நீர் நிலை பாதுகாக்கும் முயற்சி நடந்து வருகிறது. தாமிரபரணி நதிக்கரையில் 58 இடங்களில் சுத்தப்படுத்தும் பணி நடந்து வருகிறது.


குளிக்கும் தரத்தில் உள்ள தாமிரபரணி நதியை பிடிக்கும் நிறத்திற்கு மாற்றும் பல்வேறு முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. படித்துறைகள் சீரமைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளபட்டு வருகிறது.

இந்து மக்கள் கட்சியில் சீமான்?; அர்ஜுன் சம்பத் திடீர் அறிவிப்பு!

தாமிரபரணி நதியில் சோப்பு, ரசாயன பொருட்கள் மற்றும் மக்காத பொருட்கள் பயன்படுத்துவது தடைசெய்யப்படும். தாமிரபரணி நதியில் சுத்தம் செய்யப்படும் பகுதிகளில் விரைவில் நடைமுறைப்படுத்துவதற்கு ஆய்வு மேற்கொள்ளப்படும்.

நதியில் வாகனங்களை சுத்தம் செய்வதற்கு தடைவிதித்து குற்ற விசாரணை சட்டம் 133 மற்றும் பேரிடர் மேலான்மை சட்டம் ஆகியவை தற்போது வரை நடைமுறையில் உள்ளது.

மீண்டும் அந்த சட்டங்கள் மூலம் அபராதம் விதிக்கும் நடவடிக்கைகளை உள்ளாட்சி அமைப்புகள் மூலம் அமல்படுத்தபட்டு விரைவில் நடைமுறைக்கு கொண்டு வரப்படும்.

மாணவியுடன் நிர்வாண வீடியோ கால்; கப்பல் ஏறிய பா.ஜ.க பிரமுகர் ‘மானம்’!

தாமிரபரணி நதியை சுத்தம் செய்து முன்மாதிரியான பகுதிகளாக மாற்ற பாபநாசம், கல்லிடை குறிச்சி, அம்பாசமுத்திரம், சுத்தமல்லி, சேரன்மகாதேவி ஆகிய 5 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

மிக விரைவில் நெல்லை மாநகர பகுதிகளில் நடந்து வரும் பாதாள சாக்கடை திட்டபணிகள் நிறைவு பெறும். இவ்வாறு திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் விஷ்ணு தெரிவித்தார்.

அடுத்த செய்தி