ஆப்நகரம்

திருநெல்வேலி வெள்ளம்... இழப்பீடு வழங்கப்படும்: அமைச்சர் உறுதி

பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் அனைவருக்கும் நிவாரணம் வழங்க முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

Samayam Tamil 16 Jan 2021, 7:32 am
மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்து வரும் கனமழையின் காரணமாக, நெல்லை மாவட்ட அணைகளில் நீர்வரத்து ப் பெருகி உள்ளது. கூறிப்பாக பாபநாசம் தாமிரபரணி அணைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
Samayam Tamil tirunelveli flood


இந்த நிலையில் நேற்று முன்தினம் அமைச்சர் உதயகுமார் தலைமையில் அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, ராஜலட்சுமி ஆகியோர் அடங்கிய குழுவினர் நெல்லை மாவட்டத்திற்கு வந்து, வெள்ள சேதங்களை பார்வையிட்டனர்.

நெல்லை சந்திப்பு கருப்பந்துறை பகுதியில் மேலப்பாளையம், டவுன் தாமிரபரணி ஆற்றுப்பாலத்தை மூழ்கடித்து சென்ற வெள்ளத்தை பார்வையிட்டனர். மேலும் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட அந்த பகுதி
மக்களையும் பார்த்து ஆறுதல் கூறினார்கள். அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்தனர்.

போயஸ் கார்டனில் பால் காய்ச்சும் சசிகலா? வெளிவராத தகவல்கள்!

இதைத்தொடர்ந்து அமைச்சர் உதயகுமார் நிருபர்களிடம் கூறுகையில், அணைகளில் படிப்படியாக நீர்திறப்பு குறைக்கப்பட்டு வருகிறது. இதனால் அபாயகரமான சூழ்நிலை இல்லை. தாழ்வான பகுதிகளில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பாக நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். \

பயிர் சேதங்கள் கவலை அளிக்கிறது. எனினும் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் அனைவருக்கும் நிவாரணம் வழங்க முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். நெல்லை மாவட்டத்தில் மழையால் 18 வீடுகள் இடிந்துள்ளன. அவர்களுக்கும் உரிய நிவாரணம் வழங்கப்படும் என்றார்.

அடுத்த செய்தி