ஆப்நகரம்

குடும்பமாக பைக் திருடிய பெண் போலீஸ் கைது

பல்வேறு வழக்கில் கைப்பற்றப்பட்டபட்டு காவல் நிலையத்தில் இருக்கும் இருசக்கர வாகனத்தை திருடி வந்துள்ளார்.

Samayam Tamil 31 Dec 2020, 6:51 pm
கூடங்குளம் காவல் நிலையத்தில் இருசக்கர வாகனத்தை தனது கணவர் உதவியுடன் திருடிய பெண் காவலர் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
Samayam Tamil கைது செய்யப்பட்ட காவலர்


நெல்லை மாவட்டம் கூடங்குளம் காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகளில் கைப்பற்றப்பட்ட வாகனங்கள் காணாமல் போவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணனுக்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தது.

இதுகுறித்து தனிப்படை அமைக்கப்பட்டு வாகனங்கள் திருட்டில் ஈடுபடுவர்களை கண்டுபிடிக்குமாறு உத்தரவிட்டார். இந்நிலையில் கூடங்குளம் காவல் நிலையத்தில் இரண்டாம் நிலை பெண் காவலராக பணிபுரிந்து வரும் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் கிரேசியா (வயது 29).

காவல் நிலையத்தில், இரவு நேரங்களில் தனது கணவர் அன்புமணியை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு காவல் நிலையம் வரவழைத்து பல்வேறு வழக்கில் கைப்பற்றப்பட்டபட்டு காவல் நிலையத்தில் இருக்கும் இருசக்கர வாகனத்தை திருடி வந்துள்ளார்.

பச்சை துண்டு பழனிசாமியா பச்சை துரோகப் பழனிசாமியா? கனிமொழி கேள்வி

இது தனிப்படை போலீசார் விசாரனையில் தெரிய வந்தது. இதனை தொடர்ந்து பெண் போலீஸ் கிரேசியா மற்றும் அவரது கணவர் அன்புமணியை கைது செய்து விசாரனை நடத்தினர். விசாரனையில் கிரேசியா காவல் நிலையத்தில் பொறுப்பு அலுவலில் இருக்கும்போதெல்லாம் கணவர் உதவியோடு மூன்று இருசக்கர வாகனத்தை திருடி சென்றுள்ளார்.

மேலும் நிலையத்தில் இருக்கும் ஒரு மொபைல் போனையும் மற்றும் வெள்ளி அரைஞாண் கயிறு ஒன்றையும் திருடியுள்ளார். இதுதொடர்பாக இருவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்தனர். பின்பு இரவு கூடங்குளம் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது அதன்பிறகு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டனர்.

அடுத்த செய்தி