ஆப்நகரம்

காவலர் பல்பொருள் அங்காடி; நெல்லை போலீஸ் திடீர் முடிவு!

கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் திருநெல்வேலியில் உள்ள காவலர் பல்பொருள் அங்காடி ஜனவரி 23ம் தேதி வரை மூடப்படுவதாக நெல்லை போலீஸ் கமிஷனர் அறிவித்துள்ளார்.

Samayam Tamil 19 Jan 2022, 8:23 pm
தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வந்த நிலையில் கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதம் 25ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு வருகிறது.
Samayam Tamil காவலர் பல்பொருள் அங்காடி
காவலர் பல்பொருள் அங்காடி


அதன்பிறகு கொரோனாவின் தாக்கம் குறைந்து வந்தது. இதனால் அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்து செயல்படுத்தியது. இதற்கிடையில் உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் தொற்று பரவல் அதிகரிக்க தொடங்கி இருக்கிறது.

இதனால் அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்தது. அதன்படி கடைகள், ஓட்டல்கள், சினிமா திரையங்கு 50 சதவீதம் பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு நேர ஊரடங்கு என்று பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

செருப்பு காட்டிய சீமானுக்கு சிறை?; நெருப்பு பறக்கும்..தமிழக அரசியல்!

இந்த இரவு நேர ஊரடங்கு தமிழகத்தில் தற்போது அமலுக்கு வந்துள்ளது. இந்த விதிமுறைகள் உடனடியாக வந்ததை அடுத்து தமிழக அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகள் கடைபிடிக்கப்பட்டு வருகிறதா? என அதிகாரிகள் அவ்வப்போது ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்நிலையில் நெல்லையில் நேற்றைய தினம் சுமார் 700 பேருக்கு கொரானா நோய்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் நெல்லை மாவட்ட நிர்வாகம் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

என்னை சந்தித்தவர்கள் ஜாக்கிரதை; அமைச்சர் அதிரடி தகவல்!

தற்போது நெல்லை பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் காவலர் பல்பொருள் அங்காடி செயல்பட்டு வருகிறது. இங்கு நாள்தோறும் நூற்றுக்கும் மேற்பட்டோர் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்காக பல்பொருள் அங்காடிக்கு வந்து செல்கின்றனர்.

இந்நிலையில் நோய்த்தொற்று பரவாமல் தடுப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 19ம் தேதியிலிருந்து 23ம் தேதி வரை 5 நாட்கள் பல்பொருள் அங்காடி மூடப்படுவதாக நெல்லை மாநகர காவல் துறை ஆணையர் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதனால் இன்று முதல் ஐந்து நாட்கள் பல்பொருள் அங்காடி விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிப்பு ஒட்டப்பட்டுள்ளது. தொடர்ந்து நோய்த்தொற்று குறைந்த பிறகு பல்பொருள் அங்காடி திறப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் வட்டாரத்தில் தெரிவித்தனர்.

அடுத்த செய்தி