ஆப்நகரம்

ஆட்டோ கவிழ்ந்து சிறுவன் பலியான சம்பவம் எதிரொலி: நெல்லையில் ஆட்டோக்கள் சோதனை!

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே ஆட்டோ கவிழ்ந்து பள்ளி சிறுவன் உயிரிழந்த சம்பவத்தின் எதிரொலியாக நெல்லையில் ஆட்டோக்களை நிறுத்தி போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

Curated bySrini Vasan | Samayam Tamil 27 Jun 2022, 9:35 pm

ஹைலைட்ஸ்:

  • ஸ்ரீவைகுண்டம் அருகே ஆட்டோ கவிழ்ந்து பள்ளி சிறுவன் உயிரிழப்பு
  • நெல்லையில் ஆட்டோக்கள் சோதனை
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil வாகன சோதனை
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே வசவப்புரம்- செய்துங்கநல்லூர் சாலையில் இன்று காலை பள்ளி சிறுவர்களை ஏற்றி சென்ற ஆட்டோ ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் எல்கேஜி படித்து வந்த செல்வ நவீன் என்ற சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான் மேலும் இந்த விபத்தில் நான்கு சிறுவர்கள் காயமடைந்தனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விபத்து சம்பவம் எதிரொலியாக நெல்லை கொக்கிரக்குளம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே அந்த வழியாக வந்த ஆட்டோக்களை மடக்கி போலீசார் சோதனை செய்தனர்.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

குறிப்பாக அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக எண்ணிக்கையில் ஆட்களை ஏற்றி செல்கிறார்களா உரிமம், எப்சி போன்ற ஆவணங்களை முறைப்படி வைத்துள்ளார்களா என சோதனை செய்தனர்.

குறிப்பாக பள்ளி மாணவர்களை ஏற்றி சென்ற ஆட்டோக்களை மடக்கி சோதனை செய்து அதிக ஆட்களை ஏற்றி சென்ற ஆட்டோ உரிமையாளர்களிடம் அபராதம் வசூலித்தனர். மேலும் ஆட்டோ ஒட்டுனர்கள் மிக கவனமுடன் பள்ளி குழந்தைகளை அழைத்து செல்ல வேண்டும், வாகனத்தை இயக்கும் போது அலைபேசியை பயன்படுத்த கூடாது, அதிக ஆட்களை ஏற்றிச் செல்லக்கூடாது என அனைவரையும் எச்சரித்து அனுப்பினர். இந்த திடீர் வாகன தணிக்கையில் நெல்லை ஆட்சியர் அலுவலகம் எதிரில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது
எழுத்தாளர் பற்றி
Srini Vasan

அடுத்த செய்தி