ஆப்நகரம்

கொட்டித் தீர்த்து நெல்லையைக் குளிர்வித்த மழைநீர்

இதன் காரணமாக தீபாவளி பண்டிகைக்கு பொருட்கள்,துணிமணிகள் வாங்க வெளியே செல்லக் கூடிய பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

Samayam Tamil 12 Nov 2020, 7:46 pm
நெல்லை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மதியம் முதல் கனமழை பெய்தது. இதனால் சாலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
Samayam Tamil rain


தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது இந்நிலையில் இன்று மதியம் முதல் நெல்லை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

பிற பகுதிகளான மானூர், அம்பாசமுத்திரம்,களக்காடு விகேபுரம் முன்னீர்பள்ளம் உள்ளிட்ட பகுதிகளிலும் நெல்லை மாநகர் பகுதிகளான நெல்லை சந்திப்பு,பாளையங்கோட்டை, டவுண், தச்சநல்லூர் மாருதி நகர்,கேடிசி நகர்,என்ஜிஓ காலனி உள்ளிட்ட பகுதிகளிலும் இடிமின்னலுடன் மழை பெய்து வருகிறது.

மதுரை போலீஸ் ஸ்டேசனில் இன்ஸ்பெக்டருக்கு வளைகாப்பு விழா!

இதன் காரணமாக தீபாவளி பண்டிகைக்கு பொருட்கள்,துணிமணிகள் வாங்க வெளியே செல்லக் கூடிய பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மழையின் காரணமாக சாலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது..

அடுத்த செய்தி