ஆப்நகரம்

கொட்டித் தீர்த்த மழை... குளிர்ந்த தென்காசி

​​தொடர் மழையின் காரணமாக சாலையின் இருபுறமும் நீர் பெருக்கெடுத்து ஓடியது. மழை அதிகப்படியாக பெய்ததன் காரணமாக வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சாலைகளில் பயணித்தனர்.

Samayam Tamil 8 Nov 2020, 5:48 pm
தென்காசி மாவட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடி மின்னலுடன் தொடர் கனமழை. வெப்பம் தணிந்து குளிர்ந்த நிலை நிலவ தொடங்கியுள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Samayam Tamil rains


தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பரவலாக பெய்து வருகிறது. மேலும் குமரிக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தின் தென் மாவட்டங்களில்
மிக கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் அறிவித்திருந்தது.

அதன்படி தென்காசி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக வெயில் வாட்டிவதைத்த நிலையில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதன் காரணமாக இன்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளான ஆலங்குளம்,சுரண்டை, கடையநல்லூர், குற்றாலம், செங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் இடி மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது.

கோவை சிறுமி: கையில் சிலம்பம், காலில் ஸ்கேட்டிங் உலக ரெக்கார்ட்!

தொடர் மழையின் காரணமாக சாலையின் இருபுறமும் நீர் பெருக்கெடுத்து ஓடியது. மழை அதிகப்படியாக பெய்ததன் காரணமாக வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சாலைகளில் பயணித்தனர். தொடர் மழையின் காரணமாக மாவட்டத்த்தில் உள்ள அணைகளிலும் நீர்மட்டம் வெகுவாக உயர தொடங்கியுள்ளது. இதனால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அடுத்த செய்தி