ஆப்நகரம்

'குடி'மகன்கள் கொண்டாட்டம், வீடியோவிற்கு உற்சாக போஸ்...

நெல்லை மாவட்டத்தில் மதுக்கடைகள் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து டோக்கன் பெற்று மதுபிரியர்கள் வரிசையில் நின்று ஆர்வமுடன் மதுவை வாங்கி செல்கின்றனர்.

Samayam Tamil 16 May 2020, 9:43 pm
கொரோனா ஊரடங்கு உத்தரவால் தமிழகத்தில் மதுக்கடைகள் அடைக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த 7ஆம் தேதி திறக்கப்பட்டு இரண்டு நாட்கள் செயல்பட்டது.

கடைகள் திறக்கப்பட்டு விற்பனை தொடங்கியபோதும் தனி மனித இடைவெளியை கடைப்பிடிக்க முடியாமல் போனதால் உடனடியாக கடையை மூட உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனைத் தொடர்ந்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து கடைகளைத் திறந்து மது விற்பனையை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அதன்படி, தமிழகம் முழுவதும் மதுபானக்கடைகள் இன்று காலை திறக்கப்பட்டது. நெல்லை, தென்காசி மாவட்டத்தில் மொத்தமுள்ள 165 கடைகளில் கொரோனா பாதிப்பு காரணமாக 12 கடைகள் திறக்கப்படவில்லை.

கோவையில் கள்ளச்சாராயம்..! ட்ரம்மோடு சாய்க்கப்பட்ட 100 லிட்டர்..!

இன்று குறிப்பிட்ட மாவட்டங்களில் விற்பனையைத் தொடங்கிய 153 கடைகளில் உடல் ரீதியான இடைவெளியை உறுதி செய்து மதுபானம் வாங்கும் வகையில் தடுப்புகள், கயிறுகள் கட்டப்பட்டிருந்தது.

குறிப்பாக மதுபானம் வாங்க வந்தவர்களுக்கு உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி முதலில் டோக்கன் வழங்கப்பட்டது. டோக்கன்களை பெற்றுக்கொண்ட மதுபிரியர்கள் வரிசையில் நின்று ஆர்வமுடன் மதுபாட்டில்களை வாங்கிச் சென்றனர்.

அடுத்த செய்தி