ஆப்நகரம்

TNPSC Group 2: நெல்லையில் தொடங்கிய தேர்வு.. அதிகாரிகள் தீவிர சோதனை!

அரசு பணிகளுக்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு இன்று தமிழகம் முழுவதும் தொடங்கி நடைபெற்றுவருகிறது. இதில் நெல்லை மாவட்டத்தில் 30,000 பேர் தேர்வு எழுதுகின்றனர். மேலும் 13 பறக்கும் படை அதிகாரிகள் தேர்வு மையங்களில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

Curated byPoorani Lakshmanasamy | Samayam Tamil 21 May 2022, 11:10 am

ஹைலைட்ஸ்:

  • நெல்லையில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு தொடங்கியது
  • மாவட்டம் முழுவதும் 30,000 பேர் தேர்வெழுதுகின்றனர்
  • கண்காணிப்பில் ஈடுபட்டுள்ள 13 பறக்கும் படை மற்றும் 27 சுற்றுக்குழு அலுவலர்கள்
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு
நெல்லையில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு தொடங்கியது. மாவட்டம் முழுவதும் 30,000 பேர் தேர்வெழுதுகின்றனர்.
தமிழ்நாடு முழுவதும் இன்று டிஎன்பிஎஸ்சி குரூப் டூ தேர்வுகள் நடைபெறுகிறது. அந்தவகையில் நெல்லை மாவட்டத்தில் மொத்தம் 113 மையங்களில் இன்று டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு காலை 9.30 மணிக்கு தொடங்கியது. தொடர்ந்து பிற்பகல் 12.30 மணி வரை தேர்வு நடைபெறும். நெல்லையில் மொத்தம் 30,291 பேர் இத்தேர்வை எழுதுகின்றனர். இததையொட்டி அனைத்து தேர்வு மையங்களிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

அதேபோல் தேர்வு மையங்களில் கொரனோ பாதுகாப்பு வழிமுறைகள் பின்பற்றப்பட்டன.‌ தேர்வர்கள் அனைவருக்கும் வெப்ப பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. செல்போன் எடுத்து செல்லக்கூடாது. தேர்வு எழுதுவர்களைத் தவிர பிற நபர்கள் உள்ளே வரக்கூடாது போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. அதேபோல் காலை 9 மணிக்கே அனைவரும் தேர்வு மையம் வர அறிவுறுத்தப்பட்டிருந்தனர்.

ஒருமையில் திட்டிய நகராட்சி சேர்மன்; பொங்கிய கவுன்சிலர்களால் பரபரப்பு!

தேர்வில் முறைகேட்டை தடுக்க மாவட்டம் முழுவதும் 113 ஆய்வுக்குழு அலுவலர்களும், 13 பறக்கும் படை குழுக்களும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுதவிர வட்டாட்சியர், துணை வட்டாட்சியர் நிலையில் 27 சுற்றுக்குழு அலுவலர்களும் தேர்வை கண்காணித்து வருகிறார்கள்.
எழுத்தாளர் பற்றி
Poorani Lakshmanasamy

அடுத்த செய்தி