ஆப்நகரம்

குற்றால அருவிகளில் குளிக்கத் தடை... சீசன் தொடங்கிய நிலையில் ஏமாற்றம்..!

மேற்கு தொடர்ச்சி மலைகளில் பெய்து வரும் மழையின் காரணமாக குற்றால அருவிகளில் நீர் வரத்து அதிகரிக்க தொடங்கி உள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

Curated byPoorani Lakshmanasamy | Samayam Tamil 18 May 2022, 7:29 pm

ஹைலைட்ஸ்:

  • குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரிப்பு
  • சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
  • சாரல் மழையுடன் இதமான சுழலை ரசித்து செல்லும் சுற்றுலா பயணிகள்
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil குற்றால அருவிகளில் குளிக்கத் தடை
குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரித்தன் காரணமாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் சாரல் மழையுடன் இதமான சுழலை ரசித்து செல்கின்றனர் சுற்றுலா பயணிகள்.
தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரப் பகுதிகளில் குற்றால அருவிகள் அமைந்துள்ளது. குற்றாலத்தில் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய 3 மாதங்கள் சீசன் கால கட்டமாகும். தற்போது தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளதால் மேற்கு தொடர்ச்சி மலையின் உட்பகுதியில் பெய்து வரும் மழையின் காரணமாக அருவிகளில் நீர்வரத்து அதிகரித்து உள்ளது.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

இதன் காரணமாக மெயின் அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் நீர்வரத்து அதிகமாக கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு காவல்துறையினர் தடை விதித்துள்ளனர். ஓரிரு வாரத்தில் குற்றால சீசன் தொடங்க உள்ள நிலையில் தென்மேற்கு பருவ மழை காரணமாக அருவிகளில் நீர்வரத்தும், அவ்வப்போது பெய்து வரும் சாரல் மழையும் சீசன் முன் அனுபவத்தை அளித்துள்ளது.

Exclusive News: நெல்லை கல்குவாரி விபத்தில் நடக்கும் மெகா அரசியல்... தோல் உரிக்கும் சமயம் தமிழ்!

இதன் காரணமாக சுற்றுலா பயணிகள் அருவிகளில் செல்பி எடுத்தும் சாரல் மழையில் நனைந்தும் மகிழ்ச்சியை வெளிபடுத்தி வருகின்றனர்.
எழுத்தாளர் பற்றி
Poorani Lakshmanasamy

அடுத்த செய்தி