ஆப்நகரம்

கொரோனா அச்சுறுத்தும் நிலையில் மருத்துவர்கள் சம்பளத்திற்கு போராட்டம்!

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றும் பயிற்சி மருத்துவர்களுக்கு கடந்த மூன்று மாதங்களாக ஊக்கத்தொகை வழங்கப்படாதது கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் நாளை முதல் தொடர் வேலை புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடப்போவதாக தெரிவித்துள்ளனர்.

Samayam Tamil 11 Jan 2022, 11:56 pm
திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சுமார் 150க்கும் மேற்பட்ட பயிற்சி மருத்துவர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு மாதம் ஊக்கத் தொகையாக 25 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.
Samayam Tamil கொரோனா அச்சுறுத்தும் நிலையில் மருத்துவர்கள் சம்பளத்திற்கு போராட்டம்!


தற்போது தமிழகத்தில் கொரோனா வைரஸ் அவற்றின் பரவல் அதிகரித்துள்ள நிலையில் பயிற்சி மருத்துவர்களின் தேவை அதிகமாக உள்ளது இந்த நிலையில் கடந்த அக்டோபர் நவம்பர் டிசம்பர் ஆகிய மூன்று மாதங்களுக்கும் பயிற்சி மருத்துவர்களுக்கு வழங்க வேண்டிய ஊக்கத்தொகை வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது.

இதன் காரணமாக தங்களது அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய இயலாமல் கடினமான சூழலில் இருந்து வருவதாக தெரிவித்த பயிற்சி மருத்துவர்கள் திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் அலுவலகம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உடனடியாக அரசு தங்களுக்கு வழங்க வேண்டிய ஊக்கத் தொகையை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். மேலும் தங்களது கோரிக்கைகள் வலியுறுத்தி நாளை முதல் பணிகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஏற்கனவே கொரோனா வைரஸ் பற்றிய தகவல் அதிகரித்துள்ள நிலையில் பயிற்சி மருத்துவர்களின் பணி அத்தியாவசியம் என்ற நிலையில் இந்த போராட்டம் மேலும் கடினமான சூழலை ஏற்படுத்தும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அடுத்த செய்தி