ஆப்நகரம்

பிச்சையெடுப்பதில் மொழிப்பிரச்சினை... தமிழர் கொலை

இவர் பிச்சை எடுக்கும் பகுதியில் மற்றொரு நபரும் தொடர்ந்து பிச்சை எடுத்து வந்துள்ளார். ​​இதனால் இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு இருக்கிறது.

Samayam Tamil 2 Dec 2020, 9:25 am
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வெளி மாநிலங்களை சேர்ந்த பல நபர்கள் பிச்சை எடுத்து வருகின்றனர். பெரும்பாலும் இவர்கள் பிச்சை எடுத்த பின் வடசேரி பேருந்து நிலையம் நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையம் மட்டுமல்லாமல் நகரப்பகுதிகளில் அமைந்திருக்கக் கூடிய பேருந்து நிறுத்தங்களிலும் இரவு நேரங்களில் தங்கி விடுகின்றனர்.
Samayam Tamil கோப்புப்படம்


இந்நிலையில் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த நபர் காவி உடை அணிந்த நபர் ஒருவர் இன்று நாகர்கோவில் பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி அருகாமையில் பிச்சை எடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இவர் பிச்சை எடுக்கும் பகுதியில் மற்றொரு நபரும் தொடர்ந்து பிச்சை எடுத்து வந்துள்ளார்.

இதனால் இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு இருக்கிறது. ஒருவர் தமிழிலும் ஒருவர் ஹிந்தியிலும் பேசிய நிலையில் தொடர்ந்து இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கி உள்ளனர். இதில் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த நபர் தனது கையிலிருந்த கம்பால் அவரை நடுரோட்டில் அடித்து தள்ளியதோடு நடு ரோட்டிலேயே அடித்து கொலை செய்துள்ளார்.

சென்னைக்கு இன்னொரு புதிய சாலை : பயன்பாட்டுக்கு எப்போ?

இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது இதுகுறித்து தகவலறிந்து நிகழ்விடம் அந்த வடசேரி போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் பகுதியிலுள்ள கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த அவரையும் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

அடுத்த செய்தி