ஆப்நகரம்

வேன் தலைகீழாக கவிழ்ந்ததில் இருவர் பலி

புளியங்குடி அருகே அதிக பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்ற டாட்டா ஏசி வாகனம் தலை குப்பற கவிழ்ந்ததில் இருவர் பலி.யான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 29 Oct 2020, 10:51 pm
தென்காசி மாவட்டம், புளியங்குடி அருகே வெள்ளன கோட்டை பகுதியை சேர்ந்த கணிராஜ் என்பவரது குடும்ப நிகழ்ச்சிக்காக கோட்டை மலையாறு கருப்பசாமி கோயிலுக்குச் சென்றிருந்தார்.
Samayam Tamil வேன் கவிழ்ந்து விபத்து
புளிங்குடி விபத்து


கோயிலுக்கு சென்று விட்டு டாடா ஏசி வாகனத்தில் அதிகமான நபர்களை ஏற்றிக்கொண்டு வீடு திரும்பி கொண்டிருந்துள்ளனர். அப்போது இரத்தினபுரி அருகே வேகமாக வரும் போது ஒட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து வேன் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் வெள்ளன கோட்டையைச் சேர்ந்த சுந்தராம்பாள், மாரிச்சாமி ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

கடத்தல் ரேஷன் அரிசி பறிமுதல்...லாரி டிரைவர் தப்பி ஓட்டம்!

படுகாயம் அடைந்த பதினைந்துக்கும் மேற்பட்டோர் தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து புளியங்குடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அடுத்த செய்தி