ஆப்நகரம்

தண்ணீர் தொட்டியில் விழுந்து சிறுவன் மரணம்... சங்கரன்கோவிலில் சோகம்

இரண்டு வயது சிறுவன் தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து பலியான சம்பவம் சங்கரன்கோவில் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 26 Jan 2021, 11:34 pm
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் கக்கன் நகரை சேர்ந்த ஜெபஸ்டியான்- அருள் தம்பதியினரின் மகன் ஆரோன். இரண்டு வயது சிறுவனை காணவில்லை என அப்பகுதி முழுவதும் பெற்றோர்கள் தேடியும் ஆரோன் கிடைக்கவில்லை.
Samayam Tamil தண்ணீர் தொட்டியில் விழுந்து சிறுவன் பலியான வீடு
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலில் தண்ணீர் தொட்டியில் விழுந்து சிறுவன் பலியான வீடு


ஏமாற்றத்துடன் வீட்டிற்கு வந்த அவர்கள் தண்ணீர் தொட்டியை பார்த்ததும் உள்ளே தங்கள் மகன் கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனே அவனை மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.

அங்கு சிறுவனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஆரோன் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து; சங்கரன்கோவில் நகர காவல் துறையினர் தொடர்ந்து பெற்றோர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஒரு மாதமாக சித்ரவதை... ஓரினச் சேர்க்கைக்காக துன்புறுத்தப்பட்ட மாணவன்

சிறுவன் தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

அடுத்த செய்தி