ஆப்நகரம்

பிறப்புறுப்பில் தாக்கியது ஏன்..? அம்பலமாகும் பல்வீர் சிங் கொடுமைகள்..!

நெல்லை போலீசால் பாதிக்கப்பட்ட நபர் ஏஎஸ்பி பல்வீர் சிங் குறித்து அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 2 Apr 2023, 4:56 pm
அம்பாசமுத்திரம் காவல் சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டவர்களின் பல் பிடுங்கப்பட்ட விவகாரத்தில் சார் ஆட்சியர் தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது. இதே போல் மாநில மனித உரிமை ஆணையம் மற்றும் தேசிய மனித உரிமை ஆணையத்திலும் இது தொடர்பான வழக்கு விசாரணை நடந்து வருகிறது.
Samayam Tamil nellai crime


இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட ஏஎஸ்பி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட நிலையில் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்த நிலையில் இந்த விவகாரம் நடைபெற்ற காவல் நிலையங்களாக கருதப்படும் விகேபுரம் மற்றும் கல்லிடைக்குறிச்சி காவல் நிலையங்களில் தனிப்பிரிவு காவலர்களாக பணி செய்து வந்த ராஜ்குமார் மற்றும் போகன் ஆகிய இருவரையும் தற்போது ஆயுதப்படைக்கு மாற்றி காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார்.

இந்த நிலையில்,விசாரணைக்கு வந்தவர்கள் பல் எடுக்கப்பட்ட வாரத்தில் பாதிக்கப்பட்ட மாரியப்பனுக்கு முறையாக சிகிச்சை அளிக்கப்படவில்லை என புகார் எழுந்துள்ளது.

அந்த வகையில் ஏஎஸ்பி பல்வீர் சிங்கால் பாதிக்கப்பட்டுள்ள மாரியப்பன் நெல்லை அரசு மருத்துவமனையில் தனக்கு முறையாக சிகிச்சை அளிக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளார். அதுகுறித்து அவர் கூறியதாவது; காவலர்கள் தன்னிடம் அடிக்கடி விசாரணை செய்து வருகின்றனர்.. இதனால் நான் தனியார் மருத்துவமனைக்கு செல்ல உள்ளேன்.. தன்னை தாக்கியது ஏஎஸ்பி பல்வீர் சிங்தான்..

அவர் எனது பிறப்புறுப்பிலும் தாக்கினார்.. நாங்கள் எந்த குற்றமும் செய்யவில்லை... குற்றவாளி ஒருவரை நாங்கள் பிடித்துக் கொடுத்தோம் அப்பத்து ''எங்கள் வேலையை செய்வதற்கு நீ யார்?'' என விகேபுரம் காவல்துறை துணை ஆய்வாளர் முருகேசன் சம்பவ இடத்தில் தாக்கியதோடு ஏஎஸ்பி-யிடம் கூறியதாகவும் அதுதான் இதற்கு காரணம் எனவும் தெரிவித்தார்.

அடுத்த செய்தி