ஆப்நகரம்

வாழ்வை அழிக்கும் ஸ்மார்ட் சிட்டி... விரைவில் போராட்ட அறிவிப்பு

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வணிகர்களுக்கு எதிராக அரசு செயல்படுகிறது. பாதிக்கப்பட்ட மாவட்டங்களை ஒருங்கிணைத்து போராட்டம் அறிவிக்கப்படும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா தெரிவித்தார்.

Samayam Tamil 23 Jan 2021, 8:04 pm
ஸ்மார்ட் சிட்டி என்ற பெயரில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வணிகர்களின் வாழ்வாதாரத்தை ஒழிக்கும் வகையில் மத்திய ,மாநில அரசுகள் செயல்பட்டு வருகிறது.
Samayam Tamil விக்கிரமராஜா


பாளையங்கோட்டை மார்க்கெட் பகுதியில் உள்ள சுமார் 540 வணிகர்களின் கடைகளை 7 நாட்களுக்குள் காலி செய்ய உத்தரவிடபட்டு உள்ளது. ஏற்கனவே பாளையங்கோட்டையில் உள்ள பேருந்து நிலையங்கள் நேதாஜி மார்க்கெட் போன்ற பகுதியில் உள்ள கடைகள் காலி செய்யப்பட்டுள்ளன.

இதேபோல் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வணிகர்களுக்கு எதிராக அரசு செயல்படுகிறது. பாதிக்கப்பட்ட மாவட்டங்களை ஒருங்கிணைத்து போராட்டம் அறிவிக்கப்படும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா தெரிவித்தார்.

பாளையங்கோட்டையில் பிரதான சாலை மார்க்கெட் பகுதியில் உள்ள சுமார் 540 கடைகளை ஏழு நாட்களுக்குள் காலி செய்ய மாநகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து அவர் பாளை மார்க்கெட் பகுதியில் உள்ள வியாபாரிகளிடம் சென்று ஆலோசனை நடத்தினார் அதன்பின் அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.

மிஸ்டர் வேலுமணி... இரவோடு இரவாக ஒட்டப்பட்ட போஸ்டர்களால் பரபரப்பு

அப்போது பேசிய அவர், “540 வியாபாரிகள் மட்டுமல்லாமல் இதனை சார்ந்துள்ள சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்..

மத்திய மாநில அரசுகள் தொடர்ந்து இதுபோன்று இன்னல்களை வியாபாரிகளுக்கு ஏற்படுத்தி வருகிறது.
தமிழகத்தில் 17% வணிகர்களின் வாக்குகள் உள்ளன. ஆட்சியை நிர்ணயிக்கும் நிலையில் நாங்கள் உள்ளோம். வியாபாரிகளின் வாக்குகளை ஒன்றிணைத்து மாவட்ட வாரியாக ஆலோசனை நடத்தி வருகிறோம்.

மத்திய, மாநில அரசுகள் கார்ப்பரேட் கம்பெனிக்கும், ஆன்லைன் வர்த்தகத்திற்கு பெரும் ஆதரவு கரம் நீட்டி உள்ளது. இதனால் சிறு வணிகர்கள் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது” என நெல்லையில் விக்கிரமராஜா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

அடுத்த செய்தி