ஆப்நகரம்

சாதிச் சான்றிதழ் கொடுங்க... குறிசொல்லும் நூதனப் போராட்டம்

முறையாக ஜாதி சான்றிதழ் வழங்கக்கோரி 100க்கும் மேற்பட்ட குறிசொல்லும் நபர்கள் குறி சொல்லியும், குடுகுடுப்பை இசைத்தும் திருச்சுழி வட்டாட்சியர் அலுவலகத்தில் நூதன முறையில் முற்றுகை போராட்டம் நடத்தினர்.

Samayam Tamil 28 Jan 2021, 9:02 am
விருதுநகர் மாவட்டம் திருச்சுழியைச் சுற்றிலும் சுமார் 300க்கும் மேற்பட்ட குறிசொல்லும் காட்டுநாயக்கர் சமுதாயத்தைச் சேர்ந்த குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்ற நிலையில் அவர்களுக்கு முறையான ஜாதி சான்றுகள் இதுவரை வழங்கப்படவில்லை.
Samayam Tamil குறி சொல்வோர்


சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பங்களில் 5 நபர்களுக்கு மட்டுமே காட்டுநாயக்கர் என்ற ஜாதி சான்றிதழ் வழங்கி இருப்பதாகவும், மற்றவர்கள் ஜாதி சான்றிதழ் இல்லாத காரணத்தால் மேற்படிப்பைத் தொடர முடியாமலும், பணிக்கு செல்ல முடியாமலும் இப்பகுதி மக்கள் சிரமம் அடைவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

மேலும் அவர்கள் கூறுகையில், தங்கள் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து தங்களுக்கு காட்டுநாயக்கர் என்ற உரிய சாதிச் சான்றிதழ் வழங்க வேண்டும் எனக் கூறி 100க்கும் மேற்பட்ட குறிசொல்லும் நபர்கள் தங்கள் தொழில் முறையை நினைவு கூறும் வகையில் நூதன முறையில் திருச்சுழி வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

என்னை மாதிரி ஒரு அப்பா கிடைப்பது பெரிய விஷயம், விஜய்க்கு புரியல: எஸ்.ஏ. சி.

அதிகாரிகளுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் 15 நாட்களுக்குள் தங்களுக்கு ஜாதிச் சான்றிதழ் வழங்கப்பட வேண்டும் எனக் கோரியும், இல்லையெனில் அருப்புக்கோட்டை கோட்டாட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் நடத்த இருப்பதாகவும் கூறிக் கலைந்து சென்றனர்.

அடுத்த செய்தி