ஆப்நகரம்

கொரோனாவுக்கு மருந்து தயார்... வேணும்னா அரசு சொல்லட்டும்

ஆன்மீக ரகசியம் கொண்ட ஒரு மருந்தை அனைவரும் இணைந்து கண்டறிந்து அந்த மருந்துக்கான தயாரிப்பு அங்கீகாரம் பெற்றுள்ளதாக தெரிவித்தனர்.

Samayam Tamil 26 Dec 2020, 10:35 pm
இந்தியாவில் பரவி வரும் வைரஸ் தடுப்புக்கான சிறப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் அதனை அரசு பரிந்துரைத்தால் பொதுமக்களுக்கு வழங்க தயாராக இருப்பதாக கலாச்சாரம் மற்றும் பாரம்பரிய மருத்துவ கூட்டமைப்பு சார்பில் தெரிவித்துள்ளனர்.
Samayam Tamil கொரோனா மருந்து தயார்


கலாச்சாரம் மற்றும் பாரம்பரிய மருத்துவ கூட்டமைப்பு ஆன்மீக அணியான பிரபஞ்ச ஆலயம் இவைகள் இணைந்து திருநெல்வேலி சகுந்தலா சுமங்கலி திருமண மண்டபத்தில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் உலகத்தையே அச்சுறுத்தும் கொரானா நோய்களுக்கான தீர்வை பாரம்பரிய சித்த மருத்துவம் தர முடியும் என்பதை கவனத்தில் கொண்டு சித்தர்களின் மறைக்கப்பட்ட ஆன்மீக ரகசியம் கொண்ட ஒரு மருந்தை அனைவரும் இணைந்து கண்டறிந்து அந்த மருந்துக்கான தயாரிப்பு அங்கீகாரம் பெற்றுள்ளதாக தெரிவித்தனர்.

அந்த மருந்தானது தற்பொழுது பல உயிர்களை பறித்த காய்ச்சலுக்கான தீர்வாக கடந்த சில மாதங்களாக பலருக்கு பல மாநிலங்களில் கொடுத்ததில் பலர் மிக துரிதமாக எளிய முறையில் குணமடைந்ததை ஆதாரப்படுத்தி அரசுக்கு சமர்பிக்கும் வகையிலான வழிமுறைகளை வகைப்படுத்த ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.

பச்சை துண்டு பழனிசாமியா பச்சை துரோகப் பழனிசாமியா? கனிமொழி கேள்வி

இது குறித்து கலாச்சாரம் மற்றும் பாரம்பரிய மருத்துவ கூட்டமைப்பு ஆன்மீக அணி தலைவர் சங்கரன் கூறும் போது தற்பொழுது உலகத்தை அச்சுறுத்தி வரும் கொரானா நோய்களுக்கு சிறப்பு எதிர்ப்பு சகதி மருந்து கண்டறிந்து அதனை பொது மக்களுகக்கு வழங்க தயாராக இருப்பதாகவும் மத்திய மாநில அரசுகள் அதற்கு அங்கிகாரம் வழங்கும் பட்சத்தில் பொது மக்களுக்கு வழங்க தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் ஆங்கில மருத்துவத்தின் ஆளுமையால் சித்த மருத்துவம் மறைக்கபடுவதாக குற்றம் சாட்டிய அவர் அரசு உரிய அங்கீராம் வழங்கும் வரை தொடரந்து வலியுத்த போவதாகவும் அவர் தெரிவித்தார் .இந்த கூட்டத்தில் தேசிய அளவிலான நிர்வாகிகளான பாரம்பரிய சித்த மருத்துவர்களும் மாற்று மருத்துவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

அடுத்த செய்தி