ஆப்நகரம்

1,000 அடி உயர மலை உச்சியிலிருந்து குதித்த பெண்... துணைக்கு மகளையும் அழைத்து சென்றார்

கடையம் அருகே சுமார் 1,000 அடி மேல் உயரம் கொண்ட தோரணமலை முருகன் கோவிலின் மலை உச்சியில் இருந்து பெண் தன் குழந்தையுடன் கீழே விழுந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 22 Apr 2021, 4:30 am

ஹைலைட்ஸ்:

  • தென்காசி அருகே குடும்பத்துடன் வசித்து வந்தவர் லட்சுமி தேவி.
  • அவர் மனநலம் பாதிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.
  • ஏழு வயது மகளுடன் மலை உச்சியில் இருந்து விழுந்து தற்கொலை.
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil தோரணமலை முருகன் கோயில் மலை
தோரணமலை முருகன் கோயில் மலை -தென்காசி
தென்காசி மாவட்டம் கடையம் அருகே பால்வண்ணநாதபுரத்தை சேர்ந்தவர் தேவபுத்திரன். இவருடைய மனைவி லட்சுமி தேவி (39), இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.
கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக லெட்சுமி தேவி மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று காலை கோவிலுக்கு செல்வதாக கூறி, இரண்டாவது மகள்(7) மணிசாவுடன் கோவிலுக்கு வந்த லட்சுமி தேவி வீடு திரும்பாததால், கணவர் தன் உறவினர்களுடன் சேர்ந்து கோவில் முழுவதும் தேடியும் கிடைக்கவில்லை.

கொரோனாவில் புதிய உச்சம்: நெல்லையில் பெரும் பதற்றம், பீதியில் மக்கள்!

இன்று காலை மலை உச்சியில் பெண்ணின் சால்வையை பார்த்த உறவினர்கள் மலையின் வடபுறம் உச்சியிலிருந்து சுமார் 150 அடி ஆழத்தில் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

பின்னர் காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு தீயணைப்பு துறையினர், உறவினர்கள் மூலம் உடல்களை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்துள்ளனர்..

அடுத்த செய்தி