தமிழ்நாட்டில் விடுபட்டு 9 மாவட்டங்களுக்கு நடைபெற்று முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் பல படித்த இளைஞர்கள் வெற்றி பெற்றனர். அந்த வகையில் தென்காசி மாவட்டம் கடையம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வெங்கடாம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவராக ஸாருகலா(22) என்ற முதுநிலை பொறியியல் பட்டதாரி மாணவி தேர்ந்தெடுக்கப்பட்டார். வெங்கடாம்பட்டி ஊராட்சி மன்றத்துக்கு உட்பட்ட லட்சுமியூர் கிராமத்தைச் சேர்ந்த ரவி சுப்பிரமணியன் என்பவரது மகள் தான் ஸாருகலா இவர் இளநிலை பொறியியல் பட்டப் படிப்பை முடித்துவிட்டு தற்போது முதுநிலை பொறியியல் படிப்பு படித்து வருகிறார்.
ரவிசுப்ரமணியன் கடந்த 2011ம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார் இந்த சூழ்நிலையில்தான் தற்போது நடைபெற்று முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் ரவிசுப்ரமணியனின் மகளான ஸாருகலா வெங்கடாம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு பூட்டுச்சாவி சின்னத்தில் போட்டியிட்டு 3336 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
தமிழ்நாட்டின் மிக மூத்த பஞ்சாயத்து தலைவி என்ற பெருமையை பெறும் நெல்லை மூதாட்டி!
தன்னை எதிர்த்து போட்டியிட்ட ரேவதி முத்துவடிவு என்பவரை விட 796 வாக்குகள் அதிகம் பெற்று இருந்தார். இதையடுத்து இன்று ஸாருகலா வெங்கடாம்பட்டி ஊராட்சி மன்ற தலைவராக ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பதவியேற்றுக் கொண்டார்.
முன்னதாக உறுதி மொழி எடுக்கும்போது, 'வெங்கடாம்பட்டி ஊராட்சி மன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஸாருகலா எனும் நான் சட்ட முறைப்படி நிறுவப்பட்டுள்ள இந்திய அரசியலமைப்பின் பால் உண்மையான நம்பிக்கையையும், பற்று உறுதியையும் கொண்டிருப்பேன். இந்திய நாட்டின் இறையாண்மையையும், ஒருமைப்பாட்டையும் நிலைநாட்டுவேன் என்றும், நான் மேற்கொள்ள இருக்கும் கடமையை நேர்த்தியாக நிறைவேற்றுவேன் என்றும் கடவுள் அறிய உறுதி கூறுகிறேன்' என்று உறுதிமொழி ஏற்றார்.
இதையடுத்து அவருக்கு ஊர் பொதுமக்கள் மற்றும் குடும்பத்தினர் கைதட்டி வாழ்த்துக்களை தெரிவித்தனர். தமிழ்நாட்டில் இளம் ஊராட்சி மன்றத் தலைவர்களில் ஒருவராக ஸாருகலா பதவி ஏற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
ரவிசுப்ரமணியன் கடந்த 2011ம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார் இந்த சூழ்நிலையில்தான் தற்போது நடைபெற்று முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் ரவிசுப்ரமணியனின் மகளான ஸாருகலா வெங்கடாம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு பூட்டுச்சாவி சின்னத்தில் போட்டியிட்டு 3336 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
தமிழ்நாட்டின் மிக மூத்த பஞ்சாயத்து தலைவி என்ற பெருமையை பெறும் நெல்லை மூதாட்டி!
தன்னை எதிர்த்து போட்டியிட்ட ரேவதி முத்துவடிவு என்பவரை விட 796 வாக்குகள் அதிகம் பெற்று இருந்தார். இதையடுத்து இன்று ஸாருகலா வெங்கடாம்பட்டி ஊராட்சி மன்ற தலைவராக ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பதவியேற்றுக் கொண்டார்.
முன்னதாக உறுதி மொழி எடுக்கும்போது, 'வெங்கடாம்பட்டி ஊராட்சி மன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஸாருகலா எனும் நான் சட்ட முறைப்படி நிறுவப்பட்டுள்ள இந்திய அரசியலமைப்பின் பால் உண்மையான நம்பிக்கையையும், பற்று உறுதியையும் கொண்டிருப்பேன். இந்திய நாட்டின் இறையாண்மையையும், ஒருமைப்பாட்டையும் நிலைநாட்டுவேன் என்றும், நான் மேற்கொள்ள இருக்கும் கடமையை நேர்த்தியாக நிறைவேற்றுவேன் என்றும் கடவுள் அறிய உறுதி கூறுகிறேன்' என்று உறுதிமொழி ஏற்றார்.
இதையடுத்து அவருக்கு ஊர் பொதுமக்கள் மற்றும் குடும்பத்தினர் கைதட்டி வாழ்த்துக்களை தெரிவித்தனர். தமிழ்நாட்டில் இளம் ஊராட்சி மன்றத் தலைவர்களில் ஒருவராக ஸாருகலா பதவி ஏற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.