ஆப்நகரம்

பைக்கை திருடும் சமோசா போலீசிடம் சிக்கியது எப்படி!

இரு சக்கர வாகன திருட்டில் ஈடுபட்டு வந்த “சமோசா” கைது செய்யப்பட்டுள்ளார். குறிப்பிட்ட நபரிடம் 2 பைக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளார்.

Samayam Tamil 19 Aug 2021, 8:33 pm
திருப்பூர் மாவட்டம், காங்கேயத்தைச் சேர்ந்தவர் அமல்ராஜ். இவர் கடந்த வாரம் காங்கேயம் ரவுண்டனா பகுதியில் உள்ள மளிகைக் கடை ஒன்றில் பொருட்கள் வாங்கிக் கொண்டிருந்துள்ளார்.
Samayam Tamil பைக்கை திருடும் சமோசா போலீசிடம் சிக்கியது எப்படி!


அப்போது நபர் ஒருவர் அவரது இருசக்கர வாகனத்தைத் திருடித் தப்பி ஓடியுள்ளார். இதேபோல் கடந்த வாரத்தில் மட்டும் ஊதியூர் பகுதியில் 2 வாகனம் திருடு போனது.

மேலும் சரவணன் என்பவரின் இரு சக்கர வாகனத்தில் வைக்கப்பட்டிருந்த ஒரு லட்சம் ரொக்கம் திருடு போனது. இந்த 3 வழக்குகளிலும் ஒரே நபர் ஈடுபட்டிருக்கலாம் என்ற கோணத்தில் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

கணவன் இறந்ததால் மூதாட்டி தற்கொலை; ஆதரிக்க யாரும் இல்லாததால் சோக முடிவு!
இந்த சூழலில் இம்மூன்று வழக்குகளிலும் ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சியை சேர்ந்த சரவணன்(எ) “சமோசா” சரவணன்(40) என்பவர் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து “சமோசா சரவணனை” கைது செய்த போலீசார் அவரிடமிருந்து 2 பைக்குகள், ரூபாய் 90 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றைப் பறிமுதல் செய்து அவரை சிறையில் அடைத்தனர்.

அடுத்த செய்தி