ஆப்நகரம்

ஏலச்சீட்டில் ரூ.70 லட்சத்தை ஏமாந்த அப்பாவி மக்கள்… மோசடி நடைபெற்றது எப்படி?

திருப்பூரில் ஏலச்சீட்டு நடத்தி 70 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்தவரிடம் இருந்து பணத்தை மீட்டுத் தர வலியுறுத்தி பாதிக்கப்பட்டவர்கள் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.

Samayam Tamil 25 Sep 2021, 11:46 pm
திருப்பூர் கே.வி.ஆர் நகர் பகுதியில் மோகன்தாஸ் மற்றும் அவரது மனைவி மணிமேகலை ஆகியோர் அப்பகுதியில் குடியிருந்த நபர்களிடம் நன்றாக பழகியதையடுத்து அப்பகுதியை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட நபர்கள் மோகன்தாஸ் நடத்தி வந்த ஏலச் சீட்டில் 50 ஆயிரம்,80 ஆயிரம் மற்றும் ஒரு லட்சம் என சீட்டில் சேர்ந்துள்ளனர்.
Samayam Tamil திருப்பூர்


ஏலச்சீட்டு கடந்த ஆண்டு முடிவடைந்த நிலையில் ஏலச் சீட்டு பணம் தராமல் காலம் தாழ்த்தி வந்தனர். இதுகுறித்து சீட்டு கட்டிய அனைவரும் சென்று கேட்டபோது வழக்கறிஞர் மூலமாக 3 முதல் 6 மாதத்திற்குள் தங்கள் பணத்தை திருப்பித் தருவதாக அறிவிப்பு வெளியிட்டு இருந்தார்.

ஆனால் கூறிய தேதியில் பணம் தராததால் பாதிக்கப்பட்ட அனைவரும் சென்று கேட்டபோது தகாத வார்த்தைகளால் பேசியதோடு இனி பணம் தர முடியாது எனவும் உங்களால் என்ன செய்ய முடியுமோ செய்து கொள்ளுங்கள் என மிரட்டியுள்ளனர்.
https://tamil.samayam.com/latest-news/tiruppur/rare-red-necked-phalarope-bird-found-in-tirupur-district-uppar-dam/articleshow/86489346.cms

இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் செய்வதறியாது தவித்த நிலையில், ஒன்றாக சேர்ந்து மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். எத்தனை செய்திகள், எத்தனை விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் ஏலச்சீட்டு போன்ற மோசடிகளில் மக்கள் சிக்கித் தவிப்பதால் விழிப்போடு இருக்க போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அடுத்த செய்தி