ஆப்நகரம்

700 கிலோ பறிமுதல்.. இருவர் கைது.. பொங்கலூரில் பரபரப்பு!

பொங்கலூரில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Curated byPoorani Lakshmanasamy | Samayam Tamil 12 Aug 2022, 7:17 pm

ஹைலைட்ஸ்:

  • திருப்பூர் - தாராபுரம் சாலை ஆண்டிபாளையம் பகுதியில் புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக அவினாசிபாளையம் போலீசாருக்கு தகவல்
  • பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ புகையிலை பறிமுதல்
  • பதுக்கி வைத்திருந்த இருவர் கைது

ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil 700 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
தமிழகம் முழுவதும் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்வதை தடுக்க போலீசார் கடும் நடவடிக்கை எடுத்து தடை செய்ய வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் உத்தரவிட்டிருந்தார். அதன் அடிப்படையில் பொங்கலூர் அருகே திருப்பூர் - தாராபுரம் சாலை ஆண்டிபாளையம் பகுதியில் புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக அவினாசிபாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

இதனைத் தொடர்ந்து தனிப்படை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்தபோது, அங்கு விற்பனைக்காக தடை செய்யப்பட்ட 700 கிலோ புகையிலை பொருட்கள் இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.

உடனடியாக 700 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்ததுடன், இதனை பதுக்கி வைத்திருந்த மளிகை கடை வைத்து நடத்தி வரும் திருச்செங்கோட்டை சேர்ந்த முருகன் (42), சுரேஷ்குமார் (44) ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து கடத்தலுக்கு பயன்படுத்திய கார் ஒன்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர். 2 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

நொய்யல் ஆற்று மழை நீர் ஆத்துப்பாளையம் தடுப்பணைக்கு திறப்பு; விவசாயிகள் மகிழ்ச்சி!

ஒரே நேரத்தில் 700 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பொங்கலூர் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
எழுத்தாளர் பற்றி
Poorani Lakshmanasamy

அடுத்த செய்தி