ஆப்நகரம்

திருப்பூர்: காணாமல் போன சிறுவன் சடலமாக மீட்பு

காணாமல் போன 8 வயது சிறுவன் காட்டுப்பகுதியில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்

Samayam Tamil 12 Jun 2020, 8:17 pm
திருப்பூர் அருகே காணாமல் போன 8 வயது சிறுவன் காட்டுப் பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil 8 year old missed boy found as dead body in tirupur forest
திருப்பூர்: காணாமல் போன சிறுவன் சடலமாக மீட்பு


திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளியை சேர்ந்த தங்கராஜ் - சுமதி தம்பதியினர் பனியன் பின்னலாடை நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு விக்னேஷ்,பவனேஷ் ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.

நேற்று (11.06.2020) காலை முதல் இளைய மகன் பவனேஷைக் காணாத நிலையில் பெற்றோர் பல்வேறு பகுதிகளில் தேடிவந்தனர். இந்நிலையில் இன்று காலை வீட்டிற்கு பின்புறம் உள்ள காட்டுப்பகுதியில் கழுத்தில் ரத்த காயத்துடன் பவனேஷ் சடலமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.


Chennai: பாதிப்புகள் அதிகரிக்க சோதனைகள் அதிகரிப்புதான் காரணமா?

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஊத்துக்குளி காவல்துறையினர் பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் . மேலும் ரத்தக் காயத்துடன் பவனேஷ் சடலமாக கிடந்த இடத்தில் மோப்பநாய் உதவியுடன் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அடுத்த செய்தி